சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

ஏழைகளை இழிவாகக் கருதாதீர்! Khan11

ஏழைகளை இழிவாகக் கருதாதீர்!

2 posters

Go down

ஏழைகளை இழிவாகக் கருதாதீர்! Empty ஏழைகளை இழிவாகக் கருதாதீர்!

Post by gud boy Thu 17 Nov 2011 - 5:23

ஒரு விஷயத்தை செல்வந்தர்கள் எண்ணிப்பார்த்தால் ஏழைகளின் மீது அவர்களுக்கு நிச்சயம் கருணை பிறக்கும். ஆம்! செல்வந்தர்களுக்கு ஏழை மிகப்பெரிய உதவியை செய்கிறார் என்பதை செல்வந்தர்கள் புரிந்து கொண்டார்களேயானால் அவர்களால் ஏழையை நேசிக்காமல் இருக்கவே முடியாது.
ஏழை என்று ஒரு சாரார் இருக்கப்போய்தான் செல்வந்தர்கள் தர்மம் எனும் மகத்துவமிக்க நற்செயலை செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர்களைக் காக்கிறது என்பதை கருத்தில் கொண்டுவந்தால் நரக நெருப்பை விட்டுமல்ல ஒருவரை சுகங்களை அள்ளித்தரும் சுவனத்திற்கு இட்டுச்செல்வவதற்கும் தர்மம் காரணமாக அமைகிறகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த தர்மத்தைச் செல்வந்தர்கள் செய்வதற்கு இந்த ஏழைகள்தானே காரணியாக இருக்கின்றார்கள். ஏழை என்று ஒரு சாரார் இல்லையெனில் செல்வந்தன் எவரிடம் கொண்டுபோய் கொடுக்க முடியும்!

ஏழை பணக்காரன் என்பதெல்லாம் இவ்வுலகைப்படைத்த அந்த ஏக வல்ல இறைவனின் ஏற்பாடு. எனவே ஏழைகள் செல்வந்தர்களைவிட தாழ்ந்தவர்களேயல்ல. இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் ஏழைகள் கஷ்டப்பட்டாலும் மறுமையில் கிடைக்கக்கூடிய இன்பங்களையும் சுகபோகங்களையும் செல்வந்தர்கள் அனுபவிப்பதற்கு முன்பே அதனை அடையக்கூடிய பாக்கியசாலிகள் என்றுகூட சொல்லலாம்.

நமது இந்திய நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. தற்போது அந்த மார்ச் மாதத்தில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த 40 கோடி ஏழை மக்களையும் இழிவானவர்களாகக் கருத முடியுமா என்ன?]

ஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாதீர்கள். ஏழைகள், மிஸ்கீன்கள் அனாதைகளிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மீது அன்பு காட்டுங்கள். இவைகளெல்லாம் இஸ்லாம் கற்றுத்தரும் மிக உண்ணதமான பாடமாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழைகளிடம் அன்பு பாராட்டக் கூடியவர்களாக இருந்தார்கள். தனது வீட்டில் சமைக்கப்படும் ரொட்டியை தனக்கில்லையெனிலும், யாசகம் கேட்பவருக்கு கொடுத்தவிட்டு, தான் பசியுடன் உறங்குவார்கள்.

மார்க்கப்பற்றுள்ள ஏழை உலகப்பார்வையில் கேவலமானவனாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் கண்ணியமானவனாகும். செல்வந்தர்கள் ஏழைகளை உதாசினப்படுத்துகின்றனர். ஆனால் அந்த ஏழைகளின் ‘துஆ’க்(-பிரார்த்தனை)களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவன்றுள்ளார்கள்.

‘தேவைகள் உடைய அதிகமான ஏழைகள்; இவர்களை செல்வந்தர்களின் வாசலில் இருந்து விரட்டப்படுகிறது. ஆனால் இவர்கள் இறைவனிடம் நேசத்திற்கு உரியவர்களாவார்கள். இவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிடிவாதமாக (இறைவனிடம் துஆ செய்து) அமர்ந்து விட்டால், அல்லாஹ் அவசியம் அதை நிறைவேற்றி வைக்கிறான்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)

எனவே ஒரு முஸ்லிம், ஏழை சகோதரனை கேவலமாக பார்க்காமல் இருப்பது அவசியமாகும். அவனை இழிவாக கருதவும் கூடாது. ஏனெனில் அவனின் அந்தஸ்து அல்லாஹ்விடம் எப்படி இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. வசதி படைத்தவர்கள் இழிவாக கருதுவதை சகித்துக் கொள்ளாமல் கவலையடைந்து, அவர்களுக்கு எதிராக பாதகமாக இறைவனிடம் கையேந்தி துஆ செய்து அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டால் நிலைமை மாறிவிடும். எனவே நம்மை பிறர் எவ்விதம் கண்ணியமாக பார்க்க வேண்டும் என எண்ணுகிறோமோ அவ்விதமே நாமும் அனைவரையும் கண்ணியக் கண்கொண்டு காண வேண்டும், அவன் ஏழையாக இருந்தாலும் செல்வந்தனாக இருந்தாலும் சரியே.

ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ‘நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஆயிஷாவே! எனது வாசலுக்கு வரும் எந்த ஏழையையும் வெறுங்கையுடன் ஒருபோதும் திருப்பி அனுப்பிவிடாதே, பேரித்தங்கனியின் ஒரு துண்டையாவது கொடுத்துவிடு. ஆயிஷாவே! ஏழைகளிடம் அன்பு காட்டு, அவர்களை இழிவாகக் கருதாதே, ஏழைகள் செல்வந்தர்களை விட முதலில் சுவர்க்கத்தில் நுழைவார்கள்’. (நூல்: திர்மிதீ)

இந்த ஹதீஸின் மூலம்; பொருள், செல்வம் வந்துவிட்டது என்ற மமதையில் இறைவனை மறந்து வாழ்வது மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். செல்வம் கிடைத்துவிட்டது என்பதால் ஏழை எளியவர்களை கேவலமாக, இழிவாக பார்ப்பதும் அவனை பெரும் சோதனையில் ஆக்கிவிடும். இந்த பொருளும், செல்வமும் இந்த உலகத்தோடு தங்கிவிடும். செல்வந்தனை விட ஏழை இறைவனுக்கு மிக நேசமானவனாக இருக்கிறான். எனவே செல்வந்தனை விட ஏழை சுவர்க்கத்திற்கு முந்திச் செல்வான்.

''திருமண - வலீமா விருந்திலேயே கெட்டவிருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் விட்டு விடப்படும் விருந்தாகும்,'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

ஒரு ஏழையின் வீட்டில் நிக்காஹ் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அவர், தன் பக்கத்து வீட்டிலுள்ள செல்வந்தர் ஒருவரையும் தன் வீட்டு திருமணத்தில் பங்கேற்று, விருந்துண்டு செல்லுமாறு அழைக்கிறார். அந்த செல்வந்தர், ""இது ஏழை வீட்டு கல்யாணம் தானே, அங்கே நாம் ஏன் செல்ல வேண்டும். அவர் கொடுக்கும் சாதாரண விருந்தில் என்ன இருந்து விடப்போகிறது. மேலும், அங்கு சென்றால், தனக்கு அவமானமல்லவா ஏற்படும் என நினைக்க கூடாது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருமுறை ஏழை ஒருவர், ஆட்டுக்கால் குழம்பை கொடுத்தார். அதை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். இதுபோல் செல்வந்தர்கள் வீட்டு விருந்துக்கும், ஏழைகள் அவசியம் அழைக்கப்பட வேண்டும்.

ஏழைகள் விடப்படும் வலிமா விருந்து கெட்ட விருந்து எனும்பொழுது அந்த விருந்து நல்ல விருந்தாக, இறையருள் பெற்ற விருந்தாக அமைய ஏழைகள் அவசியம் என்பதை செல்வந்தர்கள் உணரவேண்டும்.

ஒரு விஷயத்தை செல்வந்தர்கள் எண்ணிப்பார்த்தால் ஏழைகளின் மீது அவர்களுக்கு நிச்சயம் கருணை

பிறக்கும். ஆம்! செல்வந்தர்களுக்கு ஏழை மிகப்பெரிய உதவியை செய்கிறார் என்பதை செல்வந்தர்கள் புரிந்து கொண்டார்களேயானால் அவர்களால் ஏழையை நேசிக்காமல் இருக்கவே முடியாது.
ஏழை என்று ஒரு சாரார் இருக்கப்போய்தான் செல்வந்தர்கள் தர்மம் எனும் மகத்துவமிக்க நற்செயலை செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர்களைக் காக்கிறது என்பதை கருத்தில் கொண்டுவந்தால் நரக நெருப்பை விட்டுமல்ல ஒருவரை சுகங்களை அள்ளித்தரும் சுவனத்திற்கு இட்டுச்செல்வவதற்கும் தர்மம் காரணமாக அமைகிறகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த தர்மத்தைச் செல்வந்தர்கள் செய்வதற்கு இந்த ஏழைகள்தானே காரணியாக இருக்கின்றார்கள். ஏழை என்று ஒரு சாரார் இல்லையெனில் செல்வந்தன் எவரிடம் கொண்டுபோய் கொடுக்க முடியும்.
ஆக, ஏழை பணக்காரன் என்பதெல்லாம் இவ்வுலகைப்படைத்த அந்த ஏக வல்ல இறைவனின் ஏற்பாடு. எனவே ஏழைகள் செல்வந்தர்களைவிட தாழ்ந்தவர்களேயல்ல. இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் ஏழைகள் கஷ்டப்பட்டாலும் மறுமையில் கிடைக்கக்கூடிய இன்பங்களையும் சுகபோகங்களையும் செல்வந்தர்கள் அனுபவிப்பதற்கு முன்பே அதனை அடையக்கூடிய பாக்கியசாலிகள் என்பதை முன்னமேயே கண்டோம்.

அகிலத்தின் அருட்கொடையாக இறைவனால் அனுப்பப்பட்ட பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏழைகளை நேசிப்பதில் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று நமக்கு வரலாறு பறைச்சாற்றுவதை மனதில் கொள்வோம். ஏழைகளை கேவலமாக எண்ணாமல் அவர்களை மதிப்போம்.

நமது இந்திய நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. தற்போது அந்த மார்ச் மாதத்தில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த 40 கோடி ஏழை மக்களையும் இழிவானவர்களாகக் கருத முடியுமா என்ன?

சிந்திப்போம் சீர்பெறுவோம்.

www.nidur.info
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஏழைகளை இழிவாகக் கருதாதீர்! Empty Re: ஏழைகளை இழிவாகக் கருதாதீர்!

Post by ஹம்னா Thu 17 Nov 2011 - 12:22

ஏழை என்று ஒரு சாரார் இருக்கப்போய்தான் செல்வந்தர்கள் தர்மம் எனும் மகத்துவமிக்க நற்செயலை செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர்களைக் காக்கிறது என்பதை கருத்தில் கொண்டுவந்தால் நரக நெருப்பை விட்டுமல்ல ஒருவரை சுகங்களை அள்ளித்தரும் சுவனத்திற்கு இட்டுச்செல்வவதற்கும் தர்மம் காரணமாக அமைகிறகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

@.


ஏழைகளை இழிவாகக் கருதாதீர்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum