Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
Page 1 of 1
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
சினிமாவில் மட்டும்தான் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். மிலிட்டரி ரூல்ஸ், போலீஸ் ரூல்ஸை எல்லாம் அனாயசமாக பிரேக் பண்ணுவார்கள். 'துப்பாக்கி’ படத்தில் சத்யன் மும்பையில்
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!
மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!
மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!
Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
சுப்பிரமணியன்சாமி - (தலைவர், ஜனதா கட்சி)
''என் கட்சியில் கோஷ்டிச் சண்டையே கிடையாது. அதனால், நானும் பொதுச் செயலாளர் சந்திரலேகாவும் நிம்மதியாக இருக்கோம். சொல்ல மறந்துட்டேன்... மதுரையில் 10 பேர் கட்சியில இருக்கா. அவா எப்படி என்கிட்டே சிக்குனான்னா, ஒரு தடவை அ.தி.மு.க. ஆதரவுல மதுரையில எம்.பி எலெக்ஷன்ல நின்னப்போ, மைக் செட் போட வந்தவா. என்னோட மழலைத் தமிழைக் கேட்டு மயங்கிட்டா. ஆனா, ஒரு விஷயம், என்னோட பேஸ்மட்டம் வீக்குங்கிற விஷயம் வட நாட்டுக்காரவாளுக்குத் தெரியாது. பல பேரைப்பத்தி நான் வெச்சிருக்கிற குற்றச்சாட்டு ஆவணங்களையும், என் கட்சித் தொண்டர்களையும் தராசுல வெச்சு எடை போட்டா, பேப்பரோட வெயிட்தான் அதிகமா இருக்கும்!''
சரத்குமார். (தலைவர்- ச.ம.க.)
''நல்லா இருந்தாத்தான் நம்மாளுங்களுக்குப் பிடிக்காதே. தி.மு.க-வுல எம்.பி-யா இருந்தப்போ, ரெட்டை நாடி உள்ளவங்க எம்.ஜி.ஆர் மாதிரி வருவீங்கனு சொல்லி, அ.தி.மு.க-வுல சேர்த்துவிட்டுச்சுங்க சில பக்கிக. எம்.சி.ஆர் காட்டன் வேஷ்டி விளம்பரத்துல நடிச்சதுதான் மிச்சம். இதுக்கிடையிலதான், பாடி பில்டர் சங்கம் ஆரம்பிக்கப்போறோம்னு கூட்டிட்டுப்போய், ச.ம. பார்ட்டியை ஆரம்பிச்சுட்டாங்க. அதை நடத்த நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். நல்லவேளை, தேர்தல் வந்தது. எப்படியோ அம்மாகிட்டே கெஞ்சி, சீட் வாங்கி ஜெயிச்சாச்சு. இருக்கிற காலத்தை, அம்மா புகழ் பாடிக் கழிக்கிறதுக்குத்தான் கட்சியை இன்னும் வெச்சிருக்கேன்!''
- செ.சல்மான்
டைம் பாஸ்
''என் கட்சியில் கோஷ்டிச் சண்டையே கிடையாது. அதனால், நானும் பொதுச் செயலாளர் சந்திரலேகாவும் நிம்மதியாக இருக்கோம். சொல்ல மறந்துட்டேன்... மதுரையில் 10 பேர் கட்சியில இருக்கா. அவா எப்படி என்கிட்டே சிக்குனான்னா, ஒரு தடவை அ.தி.மு.க. ஆதரவுல மதுரையில எம்.பி எலெக்ஷன்ல நின்னப்போ, மைக் செட் போட வந்தவா. என்னோட மழலைத் தமிழைக் கேட்டு மயங்கிட்டா. ஆனா, ஒரு விஷயம், என்னோட பேஸ்மட்டம் வீக்குங்கிற விஷயம் வட நாட்டுக்காரவாளுக்குத் தெரியாது. பல பேரைப்பத்தி நான் வெச்சிருக்கிற குற்றச்சாட்டு ஆவணங்களையும், என் கட்சித் தொண்டர்களையும் தராசுல வெச்சு எடை போட்டா, பேப்பரோட வெயிட்தான் அதிகமா இருக்கும்!''
சரத்குமார். (தலைவர்- ச.ம.க.)
''நல்லா இருந்தாத்தான் நம்மாளுங்களுக்குப் பிடிக்காதே. தி.மு.க-வுல எம்.பி-யா இருந்தப்போ, ரெட்டை நாடி உள்ளவங்க எம்.ஜி.ஆர் மாதிரி வருவீங்கனு சொல்லி, அ.தி.மு.க-வுல சேர்த்துவிட்டுச்சுங்க சில பக்கிக. எம்.சி.ஆர் காட்டன் வேஷ்டி விளம்பரத்துல நடிச்சதுதான் மிச்சம். இதுக்கிடையிலதான், பாடி பில்டர் சங்கம் ஆரம்பிக்கப்போறோம்னு கூட்டிட்டுப்போய், ச.ம. பார்ட்டியை ஆரம்பிச்சுட்டாங்க. அதை நடத்த நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். நல்லவேளை, தேர்தல் வந்தது. எப்படியோ அம்மாகிட்டே கெஞ்சி, சீட் வாங்கி ஜெயிச்சாச்சு. இருக்கிற காலத்தை, அம்மா புகழ் பாடிக் கழிக்கிறதுக்குத்தான் கட்சியை இன்னும் வெச்சிருக்கேன்!''
- செ.சல்மான்
டைம் பாஸ்
Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
'ஷெட்டர், ஓபன் யுவர் ஷட்டர்’ என்று சொல்லிவிட்டது சுப்ரீம் கோர்ட். வேறு வழி இல்லாமல் காவிரித் தண்ணீரைத் திறந்துவிடுகிறது கர்நாடக அரசு. வழக்கம்போல காவிரித் தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் தராமல் அரசியல் செய்து ஓட்டுகளை அள்ளலாம் என்று ஷெட்டர் நினைத்தால், அவர் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறார் எடியூரப்பா. ஷெட்டர் அமைச்சரவையில் இருந்த மந்திரிகளும் எம்.எல்.ஏ-க்களும் எடியூரப்பா விழாவில் கலந்துகொள்கிறார்கள். ஷெட்டர் சார்... நீருக்குள் மூழ்குது தாமரை... இந்தப் பாட்டை நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்!
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இப்படிப் பேசியிருக்கிறார், ''பதப்படுத்தும் மற்றும் சேமிக்கும் வசதிகள் இல்லாததால் 50,000 கோடி மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் ஆண்டு தோறும் வீணாகுவதாகப் பல்வேறு அமைச்சகங்கள் கூறியுள்ளன. அந்நிய முதலீடு மூலம் சேமிப்புக் கிடங்குகள் கட்ட முதலீடு கிடைக்கும்'' அதாவது குடோன் கட்டிக் கொடுக்கத்தான் வெளிநாட்டுக்காரங்க இங்கே வருவாங்க, வரணும்னு சொல்றாரு நம்ம மங்குனி, ஸாரி, மத்திய அமைச்சர். வெரிகுட்னுதான் சொல் வான் வெள்ளைக்காரன்!
'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? நானும் 'கேட்டிருக்கிறேனே’ தவிர பார்த்தது இல்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம் பெறும் தத்துவப் பாட்டு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டைப் பார்க்கும்போதுதான் ஆச்சர்யமாக இருந்தது. குதிரையில் சவாரி செய்யும் எம்.ஜி.ஆர். தன் முன்னால் நடந்துபோகும் சாவித்ரியை வம்பிழுத்தபடி பாட்டுப் பாடுகிறார். கிட்டத்தட்ட ஈவ் டீஸிங் பாட்டு. ஆனால், அதிலும் தத்துவம் சொன்னார் பாருங்க... அங்கே நிற்கிறார் எம்.ஜி.ஆர்!
டைம் பாஸ்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இப்படிப் பேசியிருக்கிறார், ''பதப்படுத்தும் மற்றும் சேமிக்கும் வசதிகள் இல்லாததால் 50,000 கோடி மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் ஆண்டு தோறும் வீணாகுவதாகப் பல்வேறு அமைச்சகங்கள் கூறியுள்ளன. அந்நிய முதலீடு மூலம் சேமிப்புக் கிடங்குகள் கட்ட முதலீடு கிடைக்கும்'' அதாவது குடோன் கட்டிக் கொடுக்கத்தான் வெளிநாட்டுக்காரங்க இங்கே வருவாங்க, வரணும்னு சொல்றாரு நம்ம மங்குனி, ஸாரி, மத்திய அமைச்சர். வெரிகுட்னுதான் சொல் வான் வெள்ளைக்காரன்!
'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? நானும் 'கேட்டிருக்கிறேனே’ தவிர பார்த்தது இல்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம் பெறும் தத்துவப் பாட்டு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டைப் பார்க்கும்போதுதான் ஆச்சர்யமாக இருந்தது. குதிரையில் சவாரி செய்யும் எம்.ஜி.ஆர். தன் முன்னால் நடந்துபோகும் சாவித்ரியை வம்பிழுத்தபடி பாட்டுப் பாடுகிறார். கிட்டத்தட்ட ஈவ் டீஸிங் பாட்டு. ஆனால், அதிலும் தத்துவம் சொன்னார் பாருங்க... அங்கே நிற்கிறார் எம்.ஜி.ஆர்!
டைம் பாஸ்
Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக ஒரு குழந்தையின் தந்தை பேஸ்கட்பால் மைதானம் கட்டித் தந்தார். இன்னொரு தந்தையோ கம்ப்யூட்டர் லேப் கட்டித் தந்தார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அப்புறம் என்ன, ஒரு குடிசையைப் போட்டு, 'இங்கே எல்.கே.ஜி. அட்மிஷன் வழங்கப்படும்’ என்று போர்டை மாட்டி வைத்தால் முடிந்தது. ஒருவர் கம்ப்யூட்டர் லேப், இன்னொருவர் கெமிஸ்ட்ரி லேப், மற்றொருவர் விளையாட்டு மைதானம், அப்புறம் டாய்லெட் தொடங்கி கேன்டீன் வரை ஒவ்வொரு அப்பாவாகக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்தால் 'அப்பப்பா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ ஆரம்பித்து அமோகமாக நடத்தலாமே!
Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
ஒவ்வொரு கட்சிக்கும் திருவிழாக்கள் உண்டு. தி.மு.க. என்றால் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாள்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் மே தினம், பா.ஜ.க. என்றால் விநாயகர் சதுர்த்தி, அ.தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள்கள். இதில் தி.மு.க. என்றால் 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’ என்றோ 'ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்றோ நாகூர் அனீபா பாடிக்கொண்டிருப்பார். பா.ஜ.க. விழா என்றால் விநாயகர் பாட்டு. மே தினம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை அமைப்புகளின் பாட்டு அல்லது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை ஸ்பீக்கரில் கேட்கலாம். அ.தி.மு.க. விழாக்கள் என்றால் ஒன்லி எம்.ஜி.ஆர் பாட்டுகள்தான். அதில் 'தூங்காதே தம்பி தூங்காதே’ வகை பாடல்களைக்கூட ரசிக்கலாம். ஆனால், மற்ற கட்சிகள் எல்லாம் கொள்கைப் பாடல்களைப் போடும் பல சமயங்களில், அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்களோ... 'தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும், கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்’, 'கூந்தல் கருப்பு... ஆஹா... குங்குமம் சிவப்பு ...ஓஹோ!’
Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது எப்படி..?
சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அரசியல் கட்சி அரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, தொண்டர்களே இல்லாமல் சீன் போடுவது இன்னும் கஷ்டம். இதோ அப்படிப்பட்டவர்களின் மைண்ட் வாய்ஸ் வாசகர்களுக்காக...
டி.ஆர். (லட்சிய(?) தி.மு.க) :
'' பெத்த புள்ளைகளே என் கட்சியில மெம்பரா இல்லைனா, என் நிலைமையை என்னானு சொல்றது? இப்பவும் அரட்டை அரங்கத்துக்கு ஏதாவது ஒரு ஊருக்குப் போனா, அங்கே நாலு பேர் வந்து, என் கட்சி நிர்வாகினு சொல்லிட்டு வந்து நிக்குறாங்க. எனக்கே ஆச்சரியமாப் போயிடும், எப்போ இவங்களைப் பொறுப்புல போட்டோம்னு. இருந்தாலும், ஒரு பந்தாவுக்காக வெளியே காட்டிக்கிறதில்லை. அப்புறந்தான் தெரிஞ்சுது, அவனுங்க அரட்டை அரங்கத்தை ஓசியில பார்க்க வந்தவய்ங்கனு!''
டாக்டர் சேதுராமன்
( நிறுவனர்- மூவேந்தர் முன்னேற்ற முன்னணி)
''ஒழுங்கா ஆஸ்பத்திரியைப் பார்த்துக்கிட்டுச் சும்மா கிடந்திருக்கலாம். ஊருல சும்மாக்கெடந்த பயலுக, நம்ம சமூகம் கவலைக்கிடமா இருக்கு, அதுக்கு நீங்கதான் வைத்தியம் பார்க்கணும்னு வசனம் பேசி, உசுப்பேத்திவிட்டானுங்க. அதுக்குப் பின்னால நான் பட்ட பாடு கொஞ்சமா, நஞ்சமா. தி.மு.க., அ.தி.மு.க-னு மாத்தி மாத்திக் கூட்டணிக்காக ஓடியாடி உழைச்சாலும், தேர்தல் வரும்போது 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’னு சொல்லிவெச்ச மாதிரிக் கேட்குறாங்க!''
சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அரசியல் கட்சி அரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, தொண்டர்களே இல்லாமல் சீன் போடுவது இன்னும் கஷ்டம். இதோ அப்படிப்பட்டவர்களின் மைண்ட் வாய்ஸ் வாசகர்களுக்காக...
டி.ஆர். (லட்சிய(?) தி.மு.க) :
'' பெத்த புள்ளைகளே என் கட்சியில மெம்பரா இல்லைனா, என் நிலைமையை என்னானு சொல்றது? இப்பவும் அரட்டை அரங்கத்துக்கு ஏதாவது ஒரு ஊருக்குப் போனா, அங்கே நாலு பேர் வந்து, என் கட்சி நிர்வாகினு சொல்லிட்டு வந்து நிக்குறாங்க. எனக்கே ஆச்சரியமாப் போயிடும், எப்போ இவங்களைப் பொறுப்புல போட்டோம்னு. இருந்தாலும், ஒரு பந்தாவுக்காக வெளியே காட்டிக்கிறதில்லை. அப்புறந்தான் தெரிஞ்சுது, அவனுங்க அரட்டை அரங்கத்தை ஓசியில பார்க்க வந்தவய்ங்கனு!''
டாக்டர் சேதுராமன்
( நிறுவனர்- மூவேந்தர் முன்னேற்ற முன்னணி)
''ஒழுங்கா ஆஸ்பத்திரியைப் பார்த்துக்கிட்டுச் சும்மா கிடந்திருக்கலாம். ஊருல சும்மாக்கெடந்த பயலுக, நம்ம சமூகம் கவலைக்கிடமா இருக்கு, அதுக்கு நீங்கதான் வைத்தியம் பார்க்கணும்னு வசனம் பேசி, உசுப்பேத்திவிட்டானுங்க. அதுக்குப் பின்னால நான் பட்ட பாடு கொஞ்சமா, நஞ்சமா. தி.மு.க., அ.தி.மு.க-னு மாத்தி மாத்திக் கூட்டணிக்காக ஓடியாடி உழைச்சாலும், தேர்தல் வரும்போது 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’னு சொல்லிவெச்ச மாதிரிக் கேட்குறாங்க!''
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|