சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Today at 21:59

» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை Khan11

லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை

Go down

லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை Empty லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:21

லிபியாவின் அயல் நாடான நைகரில்
ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை




இராணுவத்துடன் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணி வகுப்பு

லிபியாவின் முஅம்மர் கடாபி ஆதரவு இராணுவம் அண்டைய நாடான நைகரின் பாலைவன எல்லையை
கடந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை W2கனரக ஆயுதங்களை தாங்கி 200 முதல் 250 வாகனங்கள் வரை நைகர் எல்லையை தாண்டியதாக
அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பிரான்ஸ் இராணுவமும் உறுதி
செய்துள்ளது.
அத்துடன் இந்த இராணுவத்தில் சக்திவாய்ந்த தூரப் பழங்குடியின வீரர்கள்
இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த இராணுவத்திற்கு தூரப் பழங்குடியின
தலைவர் ரிஸ்ல் அக்பவுலா தலைமை வகிப்பதாகவும் நேற்றைய தினம் இவர்கள் நைகரின் அகடாஸ்
நகரை எட்டியதாகவும் நைகர் இராணுவம் தெரிவித்துள்ளது.
பிரமாண்ட இராணுவ அணிவகுப்பொன்று நேற்று அகடாஸ் நகரை தாண்டி தலைநகர் நோக்கி சென்றதாக
அங்குள்ள தனியார் பத்திரிகை நிறுவன உரிமையாளர் ஒருவர் ஏ. பி. செய்திச் சேவைக்கு
தெரிவித்துள்ளார்.
‘அகடாஸ் இன்போ’ பத்திரிகையின் உரிமையாளர் அப்துலே ஹரூனா கூறும் போது, ஆயுதம்
தாங்கிய வாகன அணிவகுப்பொன்று கடந்த திங்கட்கிழமை அகடாஸ் நகரை எட்டினர். அவர்கள்
நேற்று அதிகாலை தலைநகர் நியாமியை நோக்கி பயணித்தனர் என்றார்.
எனினும் இந்த இராணுவத்தினருடன் கடாபியோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ அல்லது அவரது
அரசின் முக்கிய நபர்களோ இருப்பதற்கான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன்
இந்த இராணுவம் குறித்து பல முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இராணுவத்தினருடன் கடாபி மற்றும் அவரது மகன் சைப் அல் இஸ்லாம் புர்கினா போசோ
பகுதியில் வைத்து இணைந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் இராணுவம் சந்தேகம்
தெரிவித்துள்ளது. இவர்கள் வேறு நாடொன்றில் தஞ்சம் புக வாய்ப்பு இருப்பதாகவும் அது
கூறியுள்ளது.
இதேவேளை, முஅம்மர் கடாபி தொடர்ந்து லிபியாவில் இருப்பதாக கடாபி அரசு பேச்சாளர் மூஸா
இப்ராஹிம் தெரிவிதுள்ளார். சிரியாவில் இருந்து இயங்கும் “அராய்” தொலைக்காட்சிக்கு
மூஸா இப்ராஹிம் கூறும்போது, முஅம்மர் கடாபி நல்ல தேக ஆரோக்கியத்துடன் உற்சாகமாக
லிபியாவுக்குள்ளேயே இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தை அந்த முரண்பட்ட குழு
அடையவில்லை என்றார்.
இதற்கிடையில் “என்னை சட்ட விரோதமாகக் கடத்திச் சென்று சித்திரவதை செய்ததற்காக
பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என
கிளர்ச்சியாளர்களின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
விபிய தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் குடியிருப்பு வளாகமான “பாப் அல்
அசீசியாவில்” உளவுத்துறை அலுவலகத்தில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய உளவு
ஆவணங்கள் மூலம், கடாபியின் அரசுக்கும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சி. ஐ. ஏ.
மற்றும் பிரிட்டனின் உளவுத்துறையான எம். ஐ. 6 ஆகியவற்றுக்கிடையில் ரகசிய தொடர்புகள்
இருந்தது வெளியானது.
லிபியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான “லிபிய
இஸ்லாமிய போராட்டக் குழு”வில் இருந்தவரும், தற்போதைய லிபியா கிளர்ச்சியாளர் இராணுவப்
பிரிவில் தளபதியாகப் பணியாற்றுபவருமான அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ், 2004 இல்
பாங்கொக்கில் இருந்த தன்னை சி. ஐ. ஏ. மற்றும் எம். ஐ. 6 உளவாளிகள் லிபியாவுக்கு
கடத்திச் சென்றதாகவும், தன்னை கடுமையாகச் சித்திரவதைப்படுத்தியதாகவும்
தெரிவித்திருந்தார்.

இது குறித்து பெல்ஹாஜ் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கும் என்
குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகள் சட்ட விரோதமானவை. இந்தக் கொடுமைகளுக்காக,
இருஉளவு நிறுவனங்களும் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார். பெல்ஹாஜின்
இந்தப் பேட்டி குறித்து, பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கருத்து கூற மறுத்து விட்டது.
இந் நிலையில் கடாபி ஆதரவுப் படை சரணடைவதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடையும்வரை
அவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என கிளர்ச்சியாளர்களின் தேசிய மாற்ற கெளன்ஸில்
தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் தெரிவித்துள்ளார். கடாபி ஆதரவுப் படையினர் சரணடைவதற்கு
வரும் சனிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் லிபியாவின் முக்கிய நான்கு நகர்கள் கடாபி ஆதரவுப் படை வசமே தொடர்ந்தும்
நீடிக்கிறது. முஅம்மர் கடாபியின் பிறந்தகமான சிர்த், ஜப்ரா, சபா மற்றும் பானி வலீத்
பகுதிகள் கடாபி ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ளது. எனினும் மேற்படி பகுதிகளை சுற்றி
கிளர்ச்சியாளர்கள் தரித்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum