சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Khan11

உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...

Go down

உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Empty உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...

Post by ahmad78 Tue 26 Jun 2012 - 6:42

உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  86443130
மீண்டும் ஒரு குழந்தையின் உயிரை பறித்திருக்கிறது அஜாக்கிரதை. நாடெங்கிலும் வருஷத்திற்கு சராசரியாக ஒன்று, இரண்டு குழந்தைகளின் உயிரை பறித்துவிடுகிறது ஆழ்துளை கிணறுகள். மலிவாகி போனது இந்தியாவில் மனித உயிர்கள் மட்டுமே. இத்தகைய சம்பவம் நிகழும் போது -
நாடு முழுவதும், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, உடனடியாக இதுபோன்ற பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுகிறது.

பிறகு மறந்து விடுகிறோம். செய்தி தொலைக்காட்சி ஒன்றில் - தமிழக அரசும் இது குறித்து ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. இத்தகைய அலட்சிய போக்குக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். மஹி என்கிற அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான ஆழ்துளை கிணறு கூட அனுமதியின்றி தோண்டப்பட்டுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை தவறுதலாக உள்ளே விழுந்துள்ளது.

குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் போது - குழந்தைகளை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. மூடப்படாத சாக்கடைகள், எதற்காவது தோண்டப்பட்ட குழிகள் என்றுள்ள சுற்றப்புறம் நம்முடையது. அதை பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். சில தினங்களுக்கு முன் தினசரியில் வாசித்த செய்தி. தொலைக்காட்சி பார்க்கிற ஆர்வத்தில் - தம் வீட்டு குழந்தையை ஒரு பெண் பழி கொடுத்திருக்கிறார். குழந்தை சாக்கடைக்குள் விழுந்து இறந்திருக்கிறது. நம் அஜாக்கிரதை - குழந்தைகள் இறக்க காரணமாகலாமா?

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த - மஹி என்கிற அந்த குழந்தைக்கு, கடந்த 20ம் தேதி, ஐந்தாவது பிறந்த நாள். அன்று மாலை, சிறுமியின் பெற்றோர், தங்களது வீட்டிலேயே பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.குழந்தை மஹிக்கு புத்தாடை அணிவித்து, அருகில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து, கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடினர். மஹியும், மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். கேக் சாப்பிட்டு முடித்ததும், இரவு 11 மணி அளவில், வீட்டுக்கு அருகே, மஹி பிறந்தநாள் குதூகலத்துடன் விளையாட சென்றாள்.

விளையாட சென்ற அந்த குழந்தைக்கு காலனாக அமைந்தது ஆழ்துளை கிணறு. விழுந்த குழந்தையை காப்பாற்ற, உயிருடன் மீட்க எத்தனை எத்தனை போராட்டம். சிறிய அஜாக்கிரதைக்கு பிறகு எத்தனை போராடியும் குழந்தை மஹியை காப்பாற்ற முடியவில்லை. மஹி விழுந்த கிணற்றுக்கு அருகில், மிகப் பெரிய பள்ளம் தோண்டி, அங்கிருந்து சிறுமி இருக்கும் இடத்தை அடைவதற்கு, சுரங்கப் பாதை அமைக்கும் முயற்சி, இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் குழுவினரும், தயார் நிலையில் இருந்தனர்.,

மீட்புப் படையினர் மேற்கொண்ட, 85 மணி நேர போராட்டம் வீணானது. கிணற்றுக்குள் விழுந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, மஹி இறந்து விட்டதாகவும், இறந்து நான்கு நாள் ஆகிவிட்டதால், மஹியின் உடல் அழுகி விட்டதாகவும், டாக்டர்கள் தெரிவித்தனர். "குழந்தைக்கு சரி வர ஆக்ஸிஜன் கிடைக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்பி.பி. அகர்வால், டாக்டர் தீபக் மாத்துர் ஆகியோர் ஈடுபட்டனர். பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை குழிக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டது என்று குர்காவ்ன் மாவட்ட மாஜிஸ்திரேட் பி.சி. மீனா பின்னர் அறிவித்தார். எல்லாவற்றையும் சட்டப்படி செய்து முடித்தனர். சில அடிப்படை ஒழுங்குகளை ஒழுங்காக செய்யாமல் - குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டு. எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் - அதை சரி வர செய்யுங்கள். அரைகுறையாக ஒரு வேலை செய்து - அதனால் பிறருக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்துவிடாதீர்கள். நாளை உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ கூட அதனால் பாதிப்பு ஏற்படலாம்.

"யாருக்கோ நிகழ்ந்தால் நமக்கென்ன என்று இருக்காதீர்கள்" சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியாவில் உள்ள ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு, 2010ல், சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை கடைபிடித்திருந்தால், பல குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். இதுவரை நடந்த முக்கிய ஆழ்துளைக் கிணறு விபத்துகள்:

2006 ஜூலை: அரியானாவில், குருக்ஷேத்ரா என்ற இடத்தில், பிரின்ஸ் என்ற ஐந்து வயது சிறுவன், 60 அடி ஆழ்துளைக் கிணற்றில், தவறி விழுந்தான். 48 மணி நேர போராட்டத்துக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டான்.

2008 அக்., 10: உ.பி., ஆக்ரா அருகே, டோக்ரா கிராமத்தில், சோனு என்ற இரண்டரை வயது குழந்தை, 150 அடி ஆழ கிணற்றில் விழுந்தாள். 98 மணி நேரத்துக்கு பின், இறந்த நிலையில் மீட்பு.

2009 ஜூன்: ராஜஸ்தானில், 4 வயதான அஞ்சு குஜரார், 70 அடி கிணற்றில் விழுந்தாள். 19 மணி நேரத்துக்குப் பின், உயிருடன் மீட்பு.

2010 ஜன.,: வாரங்கல்லில், தராவத் மகேஷ் என்ற, 18 மாத குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.

2011 மே: நாசிக்கில், ஓம் சந்தோஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலி.

2011 செப்.,: தமிழகத்தின் நெல்லையில், சுதர்சன் என்ற சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.


உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Mahi

2012 மார்ச்: இந்தூரில், பயால் என்ற குழந்தை, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.

2012 ஜூன் 24: அரியானாவில், குர்கான் அருகே, கோ என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமி மஹி, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். 85 மணி நேர போராட்டத்துக்கு பின், சடலமாக மீட்கப்பட்டாள்.(நன்றி : தினமலர்)

இனி ஒரு ஆழ்துளை கிணறு மரணம் கூட நிகழாமல் பார்த்து கொள்வோம்.

http://oosssai.blogspot.com/2012/06/blog-post_25.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum