சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

உபநிஷம் சொல்லும் முட்டாள் யார்.? Khan11

உபநிஷம் சொல்லும் முட்டாள் யார்.?

Go down

உபநிஷம் சொல்லும் முட்டாள் யார்.? Empty உபநிஷம் சொல்லும் முட்டாள் யார்.?

Post by ராகவா Tue 4 Mar 2014 - 6:28


அல்ப மேதஸா
முட்டாள் !

உபநிஷம் சொல்லும் இந்த முட்டாள் யாராம்..?

நடைமுறையில் முட்டாள் என்று யாரைச் சொல்கிறோம்? அறிவில்லாதவனை புத்தி குறைவானவனை முட்டாள் என்கிறோம் ஆங்கிலத்திலே இடியட் என்கிறோம்.

ஆனால், சநாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் வேதாந்திகள் இந்த சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் இந்தமுட்டாள் என்னும் பதம் ஸ்ருதியில் உபநிஷத்தில் எப்படிக் கையாளப்படுகிறது என்பது ருசிகரமானதாகும்.

"அல்பமேதஸா' புத்தி குறைவானவனை இப்படித்தான் உபநிடதம் அழைக்கிறது.

யார் இந்த முட்டாள் அல்பமேதஸ் அல்லது இடியட்?

ஞானப் பெட்டகமான கடோபநிஷத்தில் இந்தப் பதம் மிக அர்த்தபுஷ்டியுடன் கையாளப்படுகிறது முதல் அத்தியாயத்தி லேயே இந்தப் பதம் இடம்பெறுகிறது.

நசிகேதன் என்ற ஒன்பது வயது சிறுவன் மகா அறிவாளி முதிர்ந்த ஞானமுடையவன். வாஜஸ்வா என்ற மாமுனியின் புதல்வர் உத்தாலகர், இவர் விஸ்வஜித் என்ற யாகம் செய்தார்.

அப்போது, யாகத்தை நடத்தித்தந்த ரித்விக்குகளுக்கு வயதான பால் வற்றிய பயனில்லாத பசுக்களை தானமாகத் தந்தார். இதைக்கண்டு அவரது மகனான நசிகேதன் மனம்வருந்தினான் அதேசமயம் தந்தையைக் கண்டிக்க முடியாது அவர் மரியாதைக்குரியவர். எனவே அவன் கேட்கிறான்..

தந்தையே, இந்த யாகத்தில் என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்.இதைப்போல ஒருமுறையல்ல இரண்டு மூன்று முறை கேட்கிறான்.

கோபம் கொண்ட தந்தை உன்னை எமனுக்கு தானமாகக் கொடுத்துவிட்டேன் என்கிறார்.

அதை மனப்பூர்வமாகச் சொல்லவில்லை. தனது ஒரே மகனை எமதர்மராஜனுக்கு தானம் வழங்க எந்த தந்தைக்குத்தான் மனம் வரும்? ஆனால் மகன் தொடர்ந்து நச்சரித்ததால், மனக்கசப்போடு சொன்னது அது.

ஸ ஹோவாச பிதாம் தத் தஸ்மை
மாம் தாஸ்ய தீதி
த்வதியம் த்ருதியம் தம் ஹோவாச
ம்ருத்யுவே த்வாம் ததாம்தி
- கடோபநிஷத்

தந்தை சொன்ன இந்த வாக்கை அப்படியே சத்திய வாக்காக ஏற்ற நசிகேதன் எமன் உலகத்திற்குப் புறப்பட்டுப் போகிறான். அவனது ஞானம் தந்த ஆற்றல் அது.

அவன்தர்மராஜாவின் பட்டிணம் போனசமயம் அவர் அங்கில்லை. எமதர்மனை சந்திக்க முடியாத நிலையில், நசிகேதன் மூன்று நாட்கள் அரண்மனை வாயிலில் பட்டினியாகக் காத்துக்கிடந்தான் - பின்னர் அவன் எமனிடம் உபதேசம் பெற்றது தனிக்கதை.

இந்த இடத்தில்தான் உபநிடதம் நமது தர்மத்தை அழுத்தந்திருத் தமாக வலியுறுத்துகிறது. தனது வீட்டின் முகப்பில் ஞானமறிந்த உத்தமனை மூன்று தினங்கள் பட்டினியுடன் காக்கவைத்த பாவம் செய்தவருக்கு எப்படிப்பட்ட இழப்புகள் ஏற்படும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

அதிதி - விருந்தினர் - என்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவர் என்பது நமது இந்து தர்மத்தின் கோட்பாடு. அவரை `அதிதி நாராயணன்` என்றே அழைப்பர். விருந்தினரை தெய்வமாக பாவித்து உபசரித்தல், உணவளித்தல் இல்லறத்தாரின் முக்கிய கடமைகளில் ஒன்று அதிதி தேவோ பவ என்பது வேதவாக் கியம்.

இதையே நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இல்லறத்தானின் ஐந்து முக்கிய அறங் களைக் கூறும்போது,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்ய வேண்டும். இது இல்லறத் தானின் தலையாய கடமை என்கிறார்.

இப்படி விருந்தினரை ஓம்பாத வரைத்தான் முட்டாள் என்று கூறுகிறது உபநிடதம். அப்படிப்பட்டவனைத்தான் அல்பமேதஸ் என்று கூறுகிறது.

அப்படிப்பட்டவனுக்கு எவ்வகையான இழப்புகள் ஏற்படும் என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது.

சுருதி நம்பிக்கை, வரக்கூடிய ஐஸ்வர்யம், நல்லோர் சேர்க்கை, தார்மீக நெறி பற்றிப் பேசும் மேலோர், தியாக உணர்வுடை யோர், தார்மீகப் பலன்கள், வாரிசுகள், பசுக்கள் இவை எல்லாவற்றையும் அந்த அல்பமேதஸ் முட்டாள் இழந்து விடுகிறான்.

இப்படிப்பட்ட உன்னதமான போதனையை நமது மேலான கடமைகளை வலியுறுத்துகிறது உபநிடதம்

ஞானப்பொக்கிஷமான உபநிடத வாக்கியம் நடைமுறைப் படுத்தப்படுமானால், மனித சமுதாயம் மேன்மையடையும்!

நன்றி :ஆன்மிகம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum