Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
முதலில் உன் மீது நம்பிக்கை வை
Page 1 of 1
முதலில் உன் மீது நம்பிக்கை வை
ஒரு ஊரில் வில்வித்தையில் சிறந்து விளங்கும் வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய வில்லின் மீது அபார நம்பிக்கை அவனுக்கு. குறி தவறாமல் எய்துவதில் அவன் முதன்மையானவனாக இருந்ததால் அவனுக்கு கர்வமும் அதிகமிருந்தது.
ஒரு முறை அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் சீடர்கள் படைசூழ வந்திருந்தார். இவனுடைய திறமையைக் கேள்விபட்டு இவனைக் காணவிரும்பினார். இவன் வந்ததும் அவனை பாராட்டினார். இளம்வீரனுக்கு கர்வம் தாங்கவில்லை. நீங்கள் தான் பலகலைகள் கற்றுத்தருகிறீர்களே என்னோடு போட்டியிட உங்கள் சீடர்கள் யாரேனும் தயாராக இருக்கிறார்களா என்று சவால் விட்டான்.
முனிவர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். சீடர்களும் முனிவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு உன் அளவுக்கு அவர்கள் சிறந்துஇருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்ய சொல்கிறேன் என்றார்.
போட்டிக்கு நாள் குறித்தார்கள். போட்டிநாள் வந்தது. இளம் வீரனும், சீடனும் சரிசமமாக தங்கள் திறமையை நிரூபித்தார் கள். இறுதியாக தூரத்தில் ஒரு பொம்மையை நிற்கவைத்து அதன் கண்களை குறிவைத்து தாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள் இளம் வீரன் பொம்மையை குறிபார்த்து வில் அம்பு எய்தான். அதைத் தொடர்ந்துஅந்த அம்பையும் இரண்டாக பிளக்க செய்தான். அதைப் பார்த்த அனைவரும் அவனை ஆஹா ஓஹோவென்று பாராட்டினார்கள். வீரனுக்கு பெருமை தாங்கவில்லை.
அவனை பாராட்டிய முனிவர் இன்னுமொரு போட்டியை வைக்கிறேன் என்றார். அனைவரும் அந்த ஊரின் மலை அடி வாரத்தில் கூடினார்கள். ஒரத்தில் ஆறு ஒன்று இருந்தது. மலையையும், ஆற்றையும் இணைக்கும் வகையில் ஒரு சிறிய கயிற்றுப்பாலம் கட்டப்பட்டிருந்தது. முனிவர் தன் சீடனை அதில் நின்று தூரத்தில் இருக்கும் மரத்தின் கனியை குறி பார்த்து அடிக்க சொன்னார்.
சீடனும் தன்னுடைய குரு சொன்னதைக் கேட்டு அதன்படி செய்தான். அடுத்து உன் முறை என்றார் முனிவர் இளம் வீரனிடம், வேகமாக வந்த இளம்வீரன் அந்த கயிற்றுப்பாலத்தில் நின்றான். கீழிருந்த ஆற்று நீரும், எப்போது கயிறு அறுந்து விழுமோ என்னும் பயமும் அவனை அச்சுறுத்தியது.
அவ்வளவு தூரத்தில் இருக்கும் கனியை குறிவைக்கும் போது கீழே விழுந்துவிட்டால் என்னும் பயமே அவனுக்கு உதறலைக் கொடுத்தது. என்னால் முடியாது என்று வந்துவிட்டான்.
முனிவர் அவனை தட்டி கொடுத்தார். உன்னால் முடியாது என்று யார் சொன்னது. உனக்கு உன் மீதிருந்த நம்பிக்கையை விட வில்லின் மீதிருந்த நம்பிக்கைதான் அதிகம். அதனால் தான் உன்னால் குறியை சரியாக அடிக்க முடியவில்லை.
முதலில் உன் மீது நம்பிக்கை வை. அதுதான் உன்னை ஜெயிக்க வைக்கும் என்றார். இளம் வீரன் உண்மையை உணர்ந்தது போல் அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.
முனிவரின் அறிவுரை அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் நம்பிக்கை நல் லதையே கொடுக்கும்.
-படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நாளை மீது நம்பிக்கை வை!
» சீனாவின் உறுதி மீது, நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்
» பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்: பஷில்
» யூரோ நாணயத்தின் மீது சீனாவுக்கு நம்பிக்கை இருக்கிறது: சர்கோசி.
» அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: தேர்தல் முடிவில் வியப்பு இல்லை; விஜயகாந்த் அறிக்கை
» சீனாவின் உறுதி மீது, நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்
» பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்: பஷில்
» யூரோ நாணயத்தின் மீது சீனாவுக்கு நம்பிக்கை இருக்கிறது: சர்கோசி.
» அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: தேர்தல் முடிவில் வியப்பு இல்லை; விஜயகாந்த் அறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|