Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
அரசு-தமிழ்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை எவ்விதத்திலும் பாதிக்காது
Page 1 of 1
அரசு-தமிழ்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை எவ்விதத்திலும் பாதிக்காது
யாழ்.எம்.பிக்கள்; எண்ணிக்கை குறைப்பு: சுயாதீன அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையாளரின் முடிவு: அமைச்சர் கெஹெலிய
அரசு-தமிழ்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை எவ்விதத்திலும் பாதிக்காது
யதார்த்தம் தெரியாத திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அரசியல் கற்பிக்க வேண்டும்
யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தமை சுதந்திரமாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவாகுமென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட முடிவு அல்ல எனத் தெரிவித்த அமைச்சர் இவ்விடயம் அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையை எவ்வகையிலும் பாதிக்காது எனவும் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல; யதார்த்தம் பற்றித் தெரியாத திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அரசியல் பற்றி ஊடகங்கள் கற்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையாளரின் சுதந்திரமான முடிவை அரசியலாக்கி சுயலாபம் தேட ஐ. தே. க. முனைவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர்;
யாழ். மாவட்ட எம்.பி.க்கள் தொகையைக் குறைத்தமை அரசாங்கத்தின் செயலல்ல. சகல அதிகாரங்களையும் உடைய சுயமாக தீர்மானமெடுக்கக் கூடிய தேர்தல் ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட முடிவு தான் அது என அவர் கூறினார். அதேவேளை, இது வடக்கு தெற்கு எனக் கருதி எடுக்கப்பட்ட முடிவல்ல. வடக்கைப் போன்றே தெற்கிலும் இத்தகைய எம்.பி.க்கள் குறைப்பு நடைபெறலாம்; ஏற்கெனவே நடந்தும் இருக்கிறது. அது அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கவனத்திற்கொண்டு எடுக்கும் முடிவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியது. இம் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அந்தநாயக்க; ஒரு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான எந்த அதிகாரமும் தேர்தல் ஆணையாளருக்குக் கிடையாதென தெரிவித்தார்.
அத்துடன், இத்தீர்மானமானது அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்குப் பாதகமாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல; தேர்தல் ஆணையாளருக்குள்ள அதிகாரம் பற்றிப் புரியாததாலேயே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அவர் கூறுவது போல தேர்தல் ஆணையாளரின் முடிவு அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பி னருக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அப்பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது அரசியலமைப்பின்படி அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக் கப்படுகிறது.
இதற்கமைய, அந்தந்த காலத்தில் பதியப்படும் வாக்காளர் இடாப்பின் படி மாவட்டங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. அதற்கமையவே யாழ். மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தேர்தல் ஆணையாளருக்குள்ள தனிப்பட்ட அதிகாரமாகும்.
தினகரன்
அரசு-தமிழ்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை எவ்விதத்திலும் பாதிக்காது
யதார்த்தம் தெரியாத திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அரசியல் கற்பிக்க வேண்டும்
யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தமை சுதந்திரமாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவாகுமென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட முடிவு அல்ல எனத் தெரிவித்த அமைச்சர் இவ்விடயம் அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையை எவ்வகையிலும் பாதிக்காது எனவும் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல; யதார்த்தம் பற்றித் தெரியாத திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அரசியல் பற்றி ஊடகங்கள் கற்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையாளரின் சுதந்திரமான முடிவை அரசியலாக்கி சுயலாபம் தேட ஐ. தே. க. முனைவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர்;
யாழ். மாவட்ட எம்.பி.க்கள் தொகையைக் குறைத்தமை அரசாங்கத்தின் செயலல்ல. சகல அதிகாரங்களையும் உடைய சுயமாக தீர்மானமெடுக்கக் கூடிய தேர்தல் ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட முடிவு தான் அது என அவர் கூறினார். அதேவேளை, இது வடக்கு தெற்கு எனக் கருதி எடுக்கப்பட்ட முடிவல்ல. வடக்கைப் போன்றே தெற்கிலும் இத்தகைய எம்.பி.க்கள் குறைப்பு நடைபெறலாம்; ஏற்கெனவே நடந்தும் இருக்கிறது. அது அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கவனத்திற்கொண்டு எடுக்கும் முடிவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியது. இம் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அந்தநாயக்க; ஒரு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான எந்த அதிகாரமும் தேர்தல் ஆணையாளருக்குக் கிடையாதென தெரிவித்தார்.
அத்துடன், இத்தீர்மானமானது அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்குப் பாதகமாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல; தேர்தல் ஆணையாளருக்குள்ள அதிகாரம் பற்றிப் புரியாததாலேயே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அவர் கூறுவது போல தேர்தல் ஆணையாளரின் முடிவு அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பி னருக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அப்பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது அரசியலமைப்பின்படி அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக் கப்படுகிறது.
இதற்கமைய, அந்தந்த காலத்தில் பதியப்படும் வாக்காளர் இடாப்பின் படி மாவட்டங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. அதற்கமையவே யாழ். மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தேர்தல் ஆணையாளருக்குள்ள தனிப்பட்ட அதிகாரமாகும்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அளவெட்டி தாக்குதல் சம்பவம்: அரசு - கூட்டமைப்பு பேச்சை பாதிக்காது
» உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|