Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
விலைமாது விடுத்த கோரிக்கை..!
3 posters
Page 1 of 1
விலைமாது விடுத்த கோரிக்கை..!
படித்ததில் அதிர்ந்து போன கவிதை..!
விலைமாது விடுத்த கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.
கவிஞர்:தமிழ்தாசன்
விலைமாது விடுத்த கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.
கவிஞர்:தமிழ்தாசன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை. wrote:
மிகவும் கொடுமையான கவிதை
ஆண்கள் என்ன தப்பு செய்தாலும் நல்லவர்கள் . இதைப் படிக்கும்போது கோவம் தான் வருகிறது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
குற்றம் செய்பவர்கள் சொல்லும் சாக்குப்போக்குத்தான் கரு
பெண் என்று பிறந்துவிட்டால் பெண்மையை விற்றுத்தான் வாழவேண்டும் என்று ஆரம்பிப்பதை விட இறத்தல் மேல்
இதில் அதிகம் சமுகத்தின் பங்கு இருக்கிறது சமுகம் எங்கோ செய்த தவறில் உருவாகும் வடுக்கள் இவை மாற்ற வேண்டும் அடிப்படையினை.
பெண் என்று பிறந்துவிட்டால் பெண்மையை விற்றுத்தான் வாழவேண்டும் என்று ஆரம்பிப்பதை விட இறத்தல் மேல்
இதில் அதிகம் சமுகத்தின் பங்கு இருக்கிறது சமுகம் எங்கோ செய்த தவறில் உருவாகும் வடுக்கள் இவை மாற்ற வேண்டும் அடிப்படையினை.
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
ஆண்கள் மீது தப்பிருந்தாலும் பெண்கள் மீதுதான் முழுப்பொறுப்பும் சார்கிறது பெண் பெண்ணாக வாழ்ந்தால் இந்த நிலை ஏற்படுவதில்லை இதை செய்கின்ற அதிகமானவர்கள் சொல்லும் காரணம் வறுமை ஏமாற்றம் வேறு வழியில்லை இதைத்தவிர மாற்று வழி இருக்கிறது என்பதை செய்வதற்கு முன்னரே தேடமாட்டார்கள்பானுஷபானா wrote:
மிகவும் கொடுமையான கவிதை
ஆண்கள் என்ன தப்பு செய்தாலும் நல்லவர்கள் . இதைப் படிக்கும்போது கோவம் தான் வருகிறது
வலி நிறைந்த கவிதைதான் மனதுக்கு பாரத்தினை தருகிறது
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
நேசமுடன் ஹாசிம் wrote:ஆண்கள் மீது தப்பிருந்தாலும் பெண்கள் மீதுதான் முழுப்பொறுப்பும் சார்கிறது பெண் பெண்ணாக வாழ்ந்தால் இந்த நிலை ஏற்படுவதில்லை இதை செய்கின்ற அதிகமானவர்கள் சொல்லும் காரணம் வறுமை ஏமாற்றம் வேறு வழியில்லை இதைத்தவிர மாற்று வழி இருக்கிறது என்பதை செய்வதற்கு முன்னரே தேடமாட்டார்கள்பானுஷபானா wrote:
மிகவும் கொடுமையான கவிதை
ஆண்கள் என்ன தப்பு செய்தாலும் நல்லவர்கள் . இதைப் படிக்கும்போது கோவம் தான் வருகிறது
வலி நிறைந்த கவிதைதான் மனதுக்கு பாரத்தினை தருகிறது
ஹாசிம் நான் விபசாரம் செய்து பிழைப்பதை ஆதரிக்க வில்லை. விபசாரம் பிச்சை எடுப்பது இரண்டும் எப்போதுமே எனக்கு பிடிக்காத ஒன்னு. இப்படி செய்து பிழைப்பவர்களைக் கண்டால் கோவம் ரொம்ப வரும்.
நான் சொன்னது பழிச்சொல்லுக்கு தான் கோவம் வரும் என்றேன்.
இருவர் சம்பந்தப்படாமல் எந்த தப்பும் நிகழ்வது இல்லை ஆனால் ஆண் தப்பித்துக் கொள்கிறான் பெண் மட்டுமே மாட்டிக் கொள்கிறாள் . ஏன் இந்த பாராபட்சம் தப்புக்கு இருவருக்குமே தண்டனை வேண்டும் தானே...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
முள்ளில் சேலை விழுந்தாலும் சேலை முள்ளில் வீழ்ந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் அதனால்தான் எம் கண்மணிகளை பொக்கிசமாக ஒப்பிடுகிறோம் அனைத்து ஆண்கள் மீதும் தப்பிருக்கிறது ஒரு பெண்ணுடன் பழகும்போதே எப்படா அவள வீழ்த்தலாம் என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது ஆண்களின் குணம் (ஆனைவருமில்லை) மிகவும் ஜாக்கிரதையும் கவனமும் பெண்களுக்குத்தான் தேவை அண்கள் தப்பித்துக்கொள்வார்கள் சேற்றில் மிதித்து நீரில் கழுவிச்செல்வதுபோல் இவர்களுக்கு தண்டனை தர யாராலும் முடிவதில்லை பல ஓட்டைகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறதுபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆண்கள் மீது தப்பிருந்தாலும் பெண்கள் மீதுதான் முழுப்பொறுப்பும் சார்கிறது பெண் பெண்ணாக வாழ்ந்தால் இந்த நிலை ஏற்படுவதில்லை இதை செய்கின்ற அதிகமானவர்கள் சொல்லும் காரணம் வறுமை ஏமாற்றம் வேறு வழியில்லை இதைத்தவிர மாற்று வழி இருக்கிறது என்பதை செய்வதற்கு முன்னரே தேடமாட்டார்கள்பானுஷபானா wrote:
மிகவும் கொடுமையான கவிதை
ஆண்கள் என்ன தப்பு செய்தாலும் நல்லவர்கள் . இதைப் படிக்கும்போது கோவம் தான் வருகிறது
வலி நிறைந்த கவிதைதான் மனதுக்கு பாரத்தினை தருகிறது
ஹாசிம் நான் விபசாரம் செய்து பிழைப்பதை ஆதரிக்க வில்லை. விபசாரம் பிச்சை எடுப்பது இரண்டும் எப்போதுமே எனக்கு பிடிக்காத ஒன்னு. இப்படி செய்து பிழைப்பவர்களைக் கண்டால் கோவம் ரொம்ப வரும்.
நான் சொன்னது பழிச்சொல்லுக்கு தான் கோவம் வரும் என்றேன்.
இருவர் சம்பந்தப்படாமல் எந்த தப்பும் நிகழ்வது இல்லை ஆனால் ஆண் தப்பித்துக் கொள்கிறான் பெண் மட்டுமே மாட்டிக் கொள்கிறாள் . ஏன் இந்த பாராபட்சம் தப்புக்கு இருவருக்குமே தண்டனை வேண்டும் தானே...
அனாலும் இருக்கிறது தண்டனை அதுதான் எமது மார்கத்தின் தண்டனையினை பகிரங்கமாக பல ஆயிரம் பேர்களின் மத்தியில் கசையடி அடித்தாலும் நிறுத்தி வைத்து கல்லெறிந்து கொன்றாலும் இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும் இதை செய்வதற்கு எமது தேசங்களின் சட்டங்களோ அரசோ அனுமதிப்பதில்லை ஒரு தடவை செய்து காட்டினால் போதும்
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
நேசமுடன் ஹாசிம் wrote:முள்ளில் சேலை விழுந்தாலும் சேலை முள்ளில் வீழ்ந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் அதனால்தான் எம் கண்மணிகளை பொக்கிசமாக ஒப்பிடுகிறோம் அனைத்து ஆண்கள் மீதும் தப்பிருக்கிறது ஒரு பெண்ணுடன் பழகும்போதே எப்படா அவள வீழ்த்தலாம் என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது ஆண்களின் குணம் (ஆனைவருமில்லை) மிகவும் ஜாக்கிரதையும் கவனமும் பெண்களுக்குத்தான் தேவை அண்கள் தப்பித்துக்கொள்வார்கள் சேற்றில் மிதித்து நீரில் கழுவிச்செல்வதுபோல் இவர்களுக்கு தண்டனை தர யாராலும் முடிவதில்லை பல ஓட்டைகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறதுபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆண்கள் மீது தப்பிருந்தாலும் பெண்கள் மீதுதான் முழுப்பொறுப்பும் சார்கிறது பெண் பெண்ணாக வாழ்ந்தால் இந்த நிலை ஏற்படுவதில்லை இதை செய்கின்ற அதிகமானவர்கள் சொல்லும் காரணம் வறுமை ஏமாற்றம் வேறு வழியில்லை இதைத்தவிர மாற்று வழி இருக்கிறது என்பதை செய்வதற்கு முன்னரே தேடமாட்டார்கள்பானுஷபானா wrote:
மிகவும் கொடுமையான கவிதை
ஆண்கள் என்ன தப்பு செய்தாலும் நல்லவர்கள் . இதைப் படிக்கும்போது கோவம் தான் வருகிறது
வலி நிறைந்த கவிதைதான் மனதுக்கு பாரத்தினை தருகிறது
ஹாசிம் நான் விபசாரம் செய்து பிழைப்பதை ஆதரிக்க வில்லை. விபசாரம் பிச்சை எடுப்பது இரண்டும் எப்போதுமே எனக்கு பிடிக்காத ஒன்னு. இப்படி செய்து பிழைப்பவர்களைக் கண்டால் கோவம் ரொம்ப வரும்.
நான் சொன்னது பழிச்சொல்லுக்கு தான் கோவம் வரும் என்றேன்.
இருவர் சம்பந்தப்படாமல் எந்த தப்பும் நிகழ்வது இல்லை ஆனால் ஆண் தப்பித்துக் கொள்கிறான் பெண் மட்டுமே மாட்டிக் கொள்கிறாள் . ஏன் இந்த பாராபட்சம் தப்புக்கு இருவருக்குமே தண்டனை வேண்டும் தானே...
அனாலும் இருக்கிறது தண்டனை அதுதான் எமது மார்கத்தின் தண்டனையினை பகிரங்கமாக பல ஆயிரம் பேர்களின் மத்தியில் கசையடி அடித்தாலும் நிறுத்தி வைத்து கல்லெறிந்து கொன்றாலும் இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும் இதை செய்வதற்கு எமது தேசங்களின் சட்டங்களோ அரசோ அனுமதிப்பதில்லை ஒரு தடவை செய்து காட்டினால் போதும்
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை தான் ஹாசிம். ஆண் சேறு கண்ட இடத்துல மிதிப்பான் தண்ணி கண்ட இடத்துல கழுவுவான் எனச் சொல்வார்கள். அவனுக்கென்ன ஆம்பள எல்லாம் தான் செய்வான் இந்தப் பொட்டச்சிக்கு எங்க போச்சு அறிவுனு திட்டுவாங்க. இந்த விசயத்துல பெண்ணூக்கு பெண்ணே தான் எதிரி... பெண் 10 மாதம் கழித்து ஒரு குழந்தைக்கு தாயாகிறாள் . ஆனால் ஆண் 10 வருடங்களானாலும் ஆணாகவே இருக்கிறான். இது இயற்கை. தப்பு என்று வரும்போது இருவருக்குமே தண்டனை அவசியம். பெண்ணை கண்ணீல் காண விடாமல் காறித் துப்புவதும் அதே தப்பை செய்த ஆணை துக்கி வைத்து பேசுவதும் என்ன நியாயம்.
எல்லாவற்றிலும் ஆணுக்கு பெண் சரிசமம் இல்லைஎன என்னால் ஏற்றுக் கொள்ளமுடியும். ஆனால் தப்புக்கு தண்டனை தருவதில் எந்த பாராபட்சமும் காட்டக்கூடாது என்று தான் சொல்கிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
தண்டனை விஷயத்தில் இஸ்லாம் ஆண் பெண் என பேதமில்லாமல் எல்லோருக்கும் பொதுவான தண்டைனையை கொடுக்கிறது. ஆனால் அரசாங்கம்தான் இப்படி பாகுபடுத்தி பார்க்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: விலைமாது விடுத்த கோரிக்கை..!
நிச்சயமாக தப்புக்கு தண்டனை பெண்ணைவிட ஆணுக்குத்தான் அதிகமாக கொடுக்க வேண்டும் காரணம் தவறிழைக்கும் பெண்ணை விட அந்த சூழலுக்கு ஆளாக்கும் வேலையை விரட்டி விரட்டி செய்பவர்கள் ஆண்கள்தான் அற்ப ஆசைக்கும் தேவைகளுக்கும் அடிமையாகி சிக்கலில் மாட்டிக்கொள்ளுபவர்கள் பெண்கள் நிச்சயமாக பாராபட்சமின்றிய தண்டனை முறை அமுல் படுத்தப்பட வேண்டும்
Similar topics
» விலைமாது விடுத்த கோரிக்கை
» கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி
» விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
» ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியர் கைது _
» கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.
» கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி
» விலைமாது வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா
» ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியர் கைது _
» கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|