சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 3:09 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 2:55 pm

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 9:40 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm

» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும் Khan11

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்

Go down

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும் Empty தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்

Post by நண்பன் Tue Aug 02, 2011 8:12 am

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்
அமைச்சின் செயலாளர் கணேகல
மகேஸ்வரன் பிரசாத்
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான தகவல்களை, துல்லியமாக வழங்கும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு அதிகமான பொறுப்பு இருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகள் தொடர்பான உண்மைத் தன்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஊடகவியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்விட யத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராகவிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வில் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சின் செயலாளர்.

கடந்த ஆறு வருடங்களில் இதுபோன்ற 50 செயலமர்வுகளை நாம் நடத்தியுள்ளோம். வட பகுதியில் நடைபெறும் முதலாவது செயலமர்வு இதுவாகும்.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடக வியலாளர்களுக்கு இச்செயலமர்வு நடைபெறுகிறது. அடுத்த மாதம் யாழ்ப் பாண ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப் பாணத்தில் செயலமர்வொன்றை நடத்த வுள்ளோம்.

ஊடகவியலாளர்கள் துறைசார் வல்லுனர் களாகக் காணப்பட வேண்டும் என்பதே அமைச்சரின் எதிர்பார்ப்பு. இதனாலேயே ஊடகவியலாளர்களுக்கு செயமலர்வை ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறான செயலமர்வுகளை மேலும் பல இடங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

தகவல்களை அறிந்து கொள்வது மக்க ளின் ஜனநாயக உரிமை. தகவல்கள் சுதந்திரமாக வழங்கப்பட வேண்டும். எனவே, மக்களுக்கான தகவல்களை உண்மையாக, துல்லியமான முறையில் வழங்குவது ஊடக வியலாளர்களின் கடமை. குறிப்பாக வட பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இதுவிடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமானது.

30 வருட பயங்கரவாத நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் நாட்டில் சாந்தியையும், சமா தானத்தையும் நிலைநாட்டும் பாரிய கடமை ஊடகவியலாளர்களுக்குக் காணப் படுகிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் பாது காக்கவேண்டும்.

நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்தி யிலேயே அரசாங்கம் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. இந்த நிலையில் அபிவி ருத்திப் பணிகள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி மக்களுக்கு அதன் மூலம் ஊடகவியலாளர் நாட்டின் அபி விருத்தியில் பங்களிப்புச் செய்ய முடியும்.

இதேநேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் தனது மஹிந்த சிந்தனையின் ஊடாக பல்வேறு நன்மையான திட்டங்களை அறிவித்துள்ளார். இவற்றில் சில நிறைவேற் றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் நாம் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் ஊடகத்துறை அமைச் சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகசெயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்ட இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க சர்வதேச ஊடகங்களின் நிலைமை பற்றி கருத்துரை வழங்கியிருந்த துடன், திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடத் தலைவர் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி, கச்சி முகமட், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் செய்தி சேகரிப்பு மற்றும் அறிக்கையிடல் தொடர்பான கருத்துரை யையும் வழங்கினார்கள்.

வடபகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுத்து வரப்படும் நிலை யில் ஊடகத்துறையில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லையென இச்செயலமர்வில் கருத்துத் தெரிவித்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத், இவ்வாறான செயலமர்வுகள் மூலம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அபிவிருத்திப் பணிகள் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்றும் கூறினார்.

30 வருட கொடிய யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை நோக்கி நாடு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஊடகவியலாளர்களும் தமது பங்களிப்பை நாட்டுக்கு வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இதேவேளை சுமார் 30 வருடங்களின் பின்னர் வன்னிப் பிரதேசத்தில் இவ்வாறான செயலமர்வொன்று நடத்தப்பட்டிருப்பதானது தமக்கு மிகவும் உதவியாக அமைந்தது என மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான அந்தோனிமார்க் தெரிவித்தார்.

இந்தச் செயலமர்வின் மூலம் பல்வேறு விடயங்களைத் தாம் அறிந்து கொண்டதுடன், இதுபோன்ற பல்வேறு செயலமர்வுகள் தொடர்ந்தும் நடத்தப்படவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்.

இச்செயலமர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த பி.பி.சி. செய்திச் சேவையின் வவுனியா பிராந்திய செய்தியாளர் மாணி க்கவாசகர், இவ்வாறான செயலமர்வுகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அவசியமானது என்றார். 30 வருடங்களாக யுத்த சூழலிலிருந்த ஊடகவியலாளர்களுக்கு ஊடகத்துறை தொடர்பாக அறிவூட்டப்பட வேண்டியது அவசியம். இதனடிப்படையில் இந்த செயலமர்வு தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum