சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Khan11

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

+9
arull
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
sikkandar_badusha
*சம்ஸ்
நண்பன்
பாயிஸ்
kalainilaa
யாதுமானவள்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Tue 13 Sep 2011 - 22:40

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்து இக்கவிதையை அளிக்கிறேன்....
இன்னும் இன்னும் இதுபோன்ற விரைவான பதிவுகளிட்டு... ஐந்து இலட்சம் பதிவுகள் இந்த வருடத்திற்குள் பதித்திட வாழ்த்துகின்றேன்!

இலட்சி யத்தை மனதில் கொண்டு
இயங்கு கின்ற சேனை யின்று
இலட்சம் இரண்டு பதிவு நன்றாய்
நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

சின்னச் சின்ன கால்பதித் துமணற்
பரப்பில் ஓடிவி ளையாடி தினம்
நண்டி னங்கள் கடற்காற் றைகட
லலையை ரசித்தபின் னேபு குகின்ற
வளைசென் றுதிரும் பிமீண்டும் கடலலை
யின்சிறு தொடுதல் தேடு வபோல்
தளமிந்த சேனைய தன்மணம் நுகர
வந்திடு வார்மன மிதிலே ஒன்றி டுவார்

தமிழினத் தோர்கரங் களிலே தவழ்கின்
றயெழுத் துக்கள் தங்குமி டமிதுவே
தமிழ்குலத் தோர்தன் மனதை தான்விரும்
பும்மு றையாக விதைக்குமி டமிதுவே
தரணியி லேஉயர் தளமாய் புகழோடு
ஒய்யா ரநடை பயின்று உலவுமிந்த
சிறுமுத் துகோர்த்தார் போல்உற வனைத்தின்
தொடரு ழைப்பு ஒளிர்கிறது நன்றாய்!

மிகவதி கப்புக ழுடனே நம்சே
னைவிளங் குவதால் எத்திசையில் உள்ளோரும்
அகம்குளி ரயிங்கு வந்து ஆழ்ந்து
நம்மோ டடைக்க லமாயா கிவிட்டார்
பகைவர் களின்பக் கத்தில் பசுமை
யாயிருந் துபலபே தம்செய் தவரும்
சுகமா னதென்ற லிங்குவீ சுவதை
சுவைத்துக் கொண்டே மகிழ்கிறா றிங்கு!

அன்புக் குப்பஞ் சமில்லை நட்பிற்
குப்பஞ் சமில்லை ஆறுத லோடு
கொஞ்சு கின்ற அரவணைப் பும்கொண்
டுநம்உள் ளமெல்லாம் மகிழ்ந் திடவே
இன்று போலென் றுமேயி ணைந்து
நாமொன் றாக உயர்த்திடு வோம்
நன்றாக சேனை யினைநளி மிக்க
தமிழுடன் நானிலத் தார்போற் றிடவே !


Last edited by யாதுமானவள் on Tue 13 Sep 2011 - 23:19; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by kalainilaa Tue 13 Sep 2011 - 22:52

யாது வர ரஜினி போல .எப்ப வருவார் எப்படி வருவருவார்
என்று சொல்லவே முடியாது .ஆனா வர வேண்டிய நேரத்தில்
வந்து தமிழ் வாழ்த்துப் பாடுவார் .
நன்மையெல்லாம் சிறை செய்து போவார் .

சற்று இடைவெளிக்கு பின் உங்கள் கவிதையை தந்தமைக்கு நன்றி .
அடிக்கடி தொடரட்டும் .உங்கள் கவிதைகள் சேனையை சிறக்கட்டும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by பாயிஸ் Tue 13 Sep 2011 - 22:57

நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

சின்னச் சின்ன கால்பதித் துமணற்
பரப்பில் ஓடிவி ளையாடி தினம்
நண்டி னங்கள் கடற்காற் றைகட
லலையை ரசித்தபின் னேபு குகின்ற
வளைசென் றுதிரும் பிமீண்டும் கடலலை
யின்சிறு தொடுதல் தேடு வபோல்
தளமிந்த சேனைய தன்மணம் நுகர
வந்திடு வார்மன மிதிலே ஒன்றி டுவார்


அத்தனை வரிகளும் சேனையடைந்திருக்கும் நாளுக்கு மிகப்பொருத்தமாகவே உள்ளது.

அதிகமான புகளுடன் நம்சேனைவிழங்குவதால் எத்திசையிலுல்வர்களும் நம்மோடு இணைந்து எம்மோடு சங்கமித்து விடுகின்றனர் என்ற உண்மையை அழகாக சொல்லி சேனையின் சிறப்பை இந்தக்கவிதையால் இன்னும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பான் கவிதை அன்பாக ரசித்தேன் ரசித்தேன் சுடச்சுடச் ருசித்தேன் நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 23:03

kalainilaa wrote:யாது வர ரஜினி போல .எப்ப வருவார் எப்படி வருவருவார்
என்று சொல்லவே முடியாது .ஆனா வர வேண்டிய நேரத்தில்
வந்து தமிழ் வாழ்த்துப் பாடுவார் .
நன்மையெல்லாம் சிறை செய்து போவார் .

சற்று இடைவெளிக்கு பின் உங்கள் கவிதையை தந்தமைக்கு நன்றி .
அடிக்கடி தொடரட்டும் .உங்கள் கவிதைகள் சேனையை சிறக்கட்டும் .
@. @. இன்று உடல் சுகமில்லை என்று கேள்விப்பட்டேன் அதனால்தான் தொடர முடிய வில்லை என்று நினைக்கிறேன் மீண்டும் நம்போடு இணைந்து கொள்வார் மாஸ்டர் நன்றி உங்கள் ஆதரவிற்கு. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 23:07

இலட்சி யத்தை மனதில் கொண்டு
இயங்கு கின்ற சேனை யின்று
இலட்சம் இரண்டு பதிவு நன்றாய்
நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

மிகவும் அருமையா உள்ளது இந்த வரிகள்
வாழ்த்துக்கும் வாழ்த்துக்கள் மேடம்
மிகவும் தேனாய் இனிக்கிறது
:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by kalainilaa Tue 13 Sep 2011 - 23:14

நண்பன் wrote:
kalainilaa wrote:யாது வர ரஜினி போல .எப்ப வருவார் எப்படி வருவருவார்
என்று சொல்லவே முடியாது .ஆனா வர வேண்டிய நேரத்தில்
வந்து தமிழ் வாழ்த்துப் பாடுவார் .
நன்மையெல்லாம் சிறை செய்து போவார் .

சற்று இடைவெளிக்கு பின் உங்கள் கவிதையை தந்தமைக்கு நன்றி .
அடிக்கடி தொடரட்டும் .உங்கள் கவிதைகள் சேனையை சிறக்கட்டும் .
@. @. இன்று உடல் சுகமில்லை என்று கேள்விப்பட்டேன் அதனால்தான் தொடர முடிய வில்லை என்று நினைக்கிறேன் மீண்டும் நம்போடு இணைந்து கொள்வார் மாஸ்டர் நன்றி உங்கள் ஆதரவிற்கு. @.
:’|: :’|: :,”,:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 23:24

வரிகள் அனைத்தும் அருமை

அன்புத் தமிழில் அருமையாக கவி வடித்து சிறப்பாய் அலங்கரித்த அக்காவிற்கு நன்றி .



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by sikkandar_badusha Wed 14 Sep 2011 - 0:09

அன்புக் குப்பஞ் சமில்லை நட்பிற்
குப்பஞ் சமில்லை ஆறுத லோடு
கொஞ்சு கின்ற அரவணைப் பும்கொண்
டுநம்உள் ளமெல்லாம் மகிழ்ந் திடவே
இன்று போலென் றுமேயி ணைந்து
நாமொன் றாக உயர்த்திடு வோம்
நன்றாக சேனை யினைநளி மிக்க
தமிழுடன் நானிலத் தார்போற் றிடவே


அருமை லதா,, அழகு அறிவு,,
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 6:56

சேனையின் வெற்றிகளில் முக்கிய பங்குக்குச் சொந்தக்காரி சேனைத் தமிழ் உலாவின் தமிழ் மூதாட்டி அனைவர் மனங்களிலும் நட்புக்காக யாசிக்கப்படும் அன்பு நிறைந்த அக்காவின் அரிய சேவை அருந்தமிழ் வரிகள் அமுத படைப்புகள் என்று அத்தனையும் வியக்கச்செய்த விந்தையாக்கி யாது வீற்றிருக்கும் ஒர் தமிழ்க் கடல் அது என்று போற்றப்பட சேனை வெகுவாக மகிழ்கிறது

ஊக்கம் தலை தடவலோடல்லாது ஆரத்தழுவி உச்சிமோர்ந்து இன்பம் தருவதாய் அமைந்த அத்தனை வரிகளிலும்தான் சேனையுடன் நண்பர்களும் உங்களின் பின்னால் வென்று நிற்கிறார்கள் வெல்வார்கள்

கவிதையில் எதை குறிப்பிட்டு வாழ்த்த என்று இல்லாது அத்தனை வரிகளிலும் அசத்தலைக் கண்டு வியந்துதான் போனேன் வழமைபோல்
மிக்க மகிழ்ச்சி அக்கா உங்கள் உடல் நலம் விரைவில் குணமடைய பிராரத்தித்த உள்ளங்களுள் நானும் ஒருவன்

என்றும் நலமுடன் தேகாரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
நீங்கள் வாழுங்காலமெல்லாம் சேனையும் உயிர்த்து நிற்கும் என்ற நம்பிக்கையின் உச்சத்தில் நானும் உங்களுடன் :];: :+=+:


சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 10:20

[/quote]சின்னச் சின்ன கால்பதித் துமணற்
பரப்பில் ஓடிவி ளையாடி தினம்
நண்டி னங்கள் கடற்காற் றைகட
லலையை ரசித்தபின் னேபு குகின்ற
வளைசென் றுதிரும் பிமீண்டும் கடலலை
யின்சிறு தொடுதல் தேடு வபோல்
தளமிந்த சேனைய தன்மணம் நுகர
வந்திடு வார்மன மிதிலே ஒன்றி டுவார்

தமிழினத் தோர்கரங் களிலே தவழ்கின்
றயெழுத் துக்கள் தங்குமி டமிதுவே
தமிழ்குலத் தோர்தன் மனதை தான்விரும்
பும்மு றையாக விதைக்குமி டமிதுவே
தரணியி லேஉயர் தளமாய் புகழோடு
ஒய்யா ரநடை பயின்று உலவுமிந்த
சிறுமுத் துகோர்த்தார் போல்உற வனைத்தின்
தொடரு ழைப்பு ஒளிர்கிறது நன்றாய்! [quote]

அற்புதமாய் வடிவெடுத்துள்ள ஒரு உண்மைக கவிதை
உறவுகள் இங்கு உணரும் மன ஓட்டங்களை கவிதாயினி தனது கவிதைக்குள் அடக்கிப் பதிவிடும் அழகே அலாதி...

வாழ்த்தவேண்டிப் புறப்பட்ட இந்தக் கவிதை உறவுகளுக்கும் சேனைக்குமான பிணைப்பை தெளிவாகப் பிரதிபலிக்கிறது...

அன்னம் பிரித்தெடுத்த அன்புப் பாலாக சேனை அமைந்ததில் அனைவரையும் போல் நானும் அகமகிழ்கிறேன்...

அன்புச்சகோதரியின் அருமையான இக்கவிதைக்கு என் அன்பைக் காணிக்கையாக்குகிறேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by arull Wed 14 Sep 2011 - 10:21

ஆகா கருந்தமிழ் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அக்கா

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by Atchaya Wed 14 Sep 2011 - 10:39

நற்றமிழின் சொந்தக்காரி
ஆற்காட்டின் தமிழ் புதல்வி

எங்களின் நெஞ்சத்தில் நிர்ப்பவளே
எங்களோடு கொஞ்ச நேரம்
செங்கரும்பான தமிழின் பாக்களால்
எங்களின் உள்ளம் தொட்டவளே!

வாழ்க! வாழ்க! பல்லாண்டு!
தமிழ் பாக்கள் தருவீர் பல்லாண்டு!

#heart #heart #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by பானுஷபானா Wed 14 Sep 2011 - 11:37

எப்படித் தான் யோசிக்கிறிங்கலோ இப்படி கவிதை எழுத
பாராட்ட வார்த்தை இல்லை
அவ்வளவு அருமை யாது அக்கா
சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  ITcOyYNxuAI
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by Atchaya Wed 14 Sep 2011 - 13:00

எங்கள் அக்காவை பாராட்டிய பானுகமால் :+=+: @.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by செய்தாலி Wed 14 Sep 2011 - 14:27

தோழி லதாராணி அவர்களை இந்த தருணத்தில் பாராட்டியாக வேண்டும்
நல்லதை, நன்மையை, நல்லவைகளை வரிகளில் உயர்த்தி ஊக்குவித்து பாராட்டும்
உங்கள் நல்ல வரிகளுக்கும் ,நல்ல எண்ணத்திற்கும், நல்ல குணத்திற்கும் ,

என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

இதை ஏன் சொல்ல்கிறேன் என்றால் நான் இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும்
தாமைரையின் மேல் கிடக்கும் நீரைபோல் என் உறவு

நான் அப்படி இருந்தும் என்னை தங்கள் உறவுகளில் ஒரு ஆளாக ஆரம்பம் முதல்
இன்றுவரை சேனை உறவுகள் நேசத்துடனும் பாசத்துடனும் பழகி வருகிறார்கள்

அந்த கபடமற்ற உறவுகளை நீங்கள் வாழ்த்துகையில் உண்மையில் என் அகம் மகிழ்கிறது

சேனை இன்னும் தளிர உங்கள் ஊக்க நீரும்
கவிதை உரமும் அளித்திட வேண்டுகிறேன்

கவிதை அருமை தோழி
மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 14:32

செய்தாலி wrote:தோழி லதாராணி அவர்களை இந்த தருணத்தில் பாராட்டியாக வேண்டும்
நல்லதை, நன்மையை, நல்லவைகளை வரிகளில் உயர்த்தி ஊக்குவித்து பாராட்டும்
உங்கள் நல்ல வரிகளுக்கும் ,நல்ல எண்ணத்திற்கும், நல்ல குணத்திற்கும் ,

என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

இதை ஏன் சொல்ல்கிறேன் என்றால் நான் இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும்
தாமைரையின் மேல் கிடக்கும் நீரைபோல் என் உறவு

நான் அப்படி இருந்தும் என்னை தங்கள் உறவுகளில் ஒரு ஆளாக ஆரம்பம் முதல்
இன்றுவரை சேனை உறவுகள் நேசத்துடனும் பாசத்துடனும் பழகி வருகிறார்கள்

அந்த கபடமற்ற உறவுகளை நீங்கள் வாழ்த்துகையில் உண்மையில் என் அகம் மகிழ்கிறது

சேனை இன்னும் தளிர உங்கள் ஊக்க நீரும்
கவிதை உரமும் அளித்திட வேண்டுகிறேன்

கவிதை அருமை தோழி
மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

அத்தாமரை இலையின் மேல் கிடக்கும் நீருக்கு மவுசு அதிகம் ஏன் தெரியுமா ஆற்றிலில்லாத நீரா இருந்தும் அந்த இலையில் ஒரு துளி உருண்டு பிரளும் போது பார்வையில் கவர்ந்து மகிழச்செய்கிறதே அது போலத்தான் நீங்க உங்க வரிகளில் கவர்ச்சி தந்து மனங்களை கொள்ளை கொள்கிறீர்கள் உங்களுக்கென்றோர் இடம் விலை பேசிக்கொண்டிருக்கிறார்கள் சேனையிலும் மிக விரைவில் அதை வாங்கி ஒப்படைக்கப்பட்டுவிடும் நீங்களும் ஆற அமர்ந்து உங்கள் சேனையினை விளைவித்து நல்ல அறுவடையினைப் பெறலாம் தோழா என்றும் உங்களுடன் நாங்களிருக்கிறோம் உண்மை நட்புடன் :];: :];:


சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by செய்தாலி Wed 14 Sep 2011 - 16:18

நேசமுடன் ஹாசிம் wrote:
செய்தாலி wrote:தோழி லதாராணி அவர்களை இந்த தருணத்தில் பாராட்டியாக வேண்டும்
நல்லதை, நன்மையை, நல்லவைகளை வரிகளில் உயர்த்தி ஊக்குவித்து பாராட்டும்
உங்கள் நல்ல வரிகளுக்கும் ,நல்ல எண்ணத்திற்கும், நல்ல குணத்திற்கும் ,

என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

இதை ஏன் சொல்ல்கிறேன் என்றால் நான் இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும்
தாமைரையின் மேல் கிடக்கும் நீரைபோல் என் உறவு

நான் அப்படி இருந்தும் என்னை தங்கள் உறவுகளில் ஒரு ஆளாக ஆரம்பம் முதல்
இன்றுவரை சேனை உறவுகள் நேசத்துடனும் பாசத்துடனும் பழகி வருகிறார்கள்

அந்த கபடமற்ற உறவுகளை நீங்கள் வாழ்த்துகையில் உண்மையில் என் அகம் மகிழ்கிறது

சேனை இன்னும் தளிர உங்கள் ஊக்க நீரும்
கவிதை உரமும் அளித்திட வேண்டுகிறேன்

கவிதை அருமை தோழி
மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

அத்தாமரை இலையின் மேல் கிடக்கும் நீருக்கு மவுசு அதிகம் ஏன் தெரியுமா ஆற்றிலில்லாத நீரா இருந்தும் அந்த இலையில் ஒரு துளி உருண்டு பிரளும் போது பார்வையில் கவர்ந்து மகிழச்செய்கிறதே அது போலத்தான் நீங்க உங்க வரிகளில் கவர்ச்சி தந்து மனங்களை கொள்ளை கொள்கிறீர்கள் உங்களுக்கென்றோர் இடம் விலை பேசிக்கொண்டிருக்கிறார்கள் சேனையிலும் மிக விரைவில் அதை வாங்கி ஒப்படைக்கப்பட்டுவிடும் நீங்களும் ஆற அமர்ந்து உங்கள் சேனையினை விளைவித்து நல்ல அறுவடையினைப் பெறலாம் தோழா என்றும் உங்களுடன் நாங்களிருக்கிறோம் உண்மை நட்புடன் :];: :];:

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Sep 2011 - 16:26

அன்புக் குப்பஞ் சமில்லை நட்பிற்
குப்பஞ் சமில்லை ஆறுத லோடு
கொஞ்சு கின்ற அரவணைப் பும்கொண்
டுநம்உள் ளமெல்லாம் மகிழ்ந் திடவே
இன்று போலென் றுமேயி ணைந்து
நாமொன் றாக உயர்த்திடு வோம்
நன்றாக சேனை யினைநளி மிக்க
தமிழுடன் நானிலத் தார்போற் றிடவே !





யாதுமானவள் அக்காவின் கவிதையைத்தான் வந்தவுடன் பார்த்தேன்
பாராட்டுக்கலள் அருமையான வரிகளுடன் அனைத்துறவுகளும் கவரும் வகையில் நன்றாகவே கவிதை தந்திருக்கும் லதாராணி அக்காவிற்க்கு வாழ்த்துக்கள்.
சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  528804 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:36

Atchaya wrote:நற்றமிழின் சொந்தக்காரி
ஆற்காட்டின் தமிழ் புதல்வி

எங்களின் நெஞ்சத்தில் நிர்ப்பவளே
எங்களோடு கொஞ்ச நேரம்
செங்கரும்பான தமிழின் பாக்களால்
எங்களின் உள்ளம் தொட்டவளே!

வாழ்க! வாழ்க! பல்லாண்டு!
தமிழ் பாக்கள் தருவீர் பல்லாண்டு!

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  2737039178 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  2737039178 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  2737039178

ஆஹா.... ஆர்க்காட்டிலிருந்தே ஒரு வாழ்த்து கிடைப்பது போல் உள்ளம் மகிழ்கிறேன்.

நன்றி ரவி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:43

kalainilaa wrote:யாது வர ரஜினி போல .எப்ப வருவார் எப்படி வருவருவார்
என்று சொல்லவே முடியாது .ஆனா வர வேண்டிய நேரத்தில்
வந்து தமிழ் வாழ்த்துப் பாடுவார் .
நன்மையெல்லாம் சிறை செய்து போவார் .

சற்று இடைவெளிக்கு பின் உங்கள் கவிதையை தந்தமைக்கு நன்றி .
அடிக்கடி தொடரட்டும் .உங்கள் கவிதைகள் சேனையை சிறக்கட்டும் .

நன்றி நன்றி கலைநிலா... என்னை போய் எதற்குங்க ரஜினியோட ஒப்பிடறீங்க. நான் தமிழ் அது கன்னடம். ஹிஹி...
இருந்தாலும் தங்கள் வாழ்த்திற்கு நன்றி கலை நிலா... தமிழால் சிறை செய்யலாம். ஆனால் தமிழை சிறை செய்யக் கூடாது.

அதிகமான கவிதைகளிட்டு அசத்துபவர் தாங்கள் தான் எப்போதும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:54

பாயிஸ் wrote:நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

சின்னச் சின்ன கால்பதித் துமணற்
பரப்பில் ஓடிவி ளையாடி தினம்
நண்டி னங்கள் கடற்காற் றைகட
லலையை ரசித்தபின் னேபு குகின்ற
வளைசென் றுதிரும் பிமீண்டும் கடலலை
யின்சிறு தொடுதல் தேடு வபோல்
தளமிந்த சேனைய தன்மணம் நுகர
வந்திடு வார்மன மிதிலே ஒன்றி டுவார்


அத்தனை வரிகளும் சேனையடைந்திருக்கும் நாளுக்கு மிகப்பொருத்தமாகவே உள்ளது.

அதிகமான புகளுடன் நம்சேனைவிழங்குவதால் எத்திசையிலுல்வர்களும் நம்மோடு இணைந்து எம்மோடு சங்கமித்து விடுகின்றனர் என்ற உண்மையை அழகாக சொல்லி சேனையின் சிறப்பை இந்தக்கவிதையால் இன்னும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பான் கவிதை அன்பாக ரசித்தேன் ரசித்தேன் சுடச்சுடச் ருசித்தேன் நன்றி

தங்கள் ரசனைக்கு ஒரு நன்றி. ஆழ்ந்து ரசிப்பதும் ரசிப்பதை அதே ரசனையுடன் அடுத்தவருடன் பகிர்வதும் தனிக் கலை. அக்கலையை கைவரப் பெற்று உள்ளீர் பாயிஸ். எப்போதும் உங்கள் ரசனையை ரசிப்பேன் நான். இன்றும் அதுபோலவே. இந்தக் கவிதையில் எனக்குப் பிடித்த வரிகள்தான் தாங்கள் ரசித்து பதில் கொடுத்திருப்பது.

மிக்க நன்றியும் வாழ்த்துக்களும். உங்கள் ஆக்கங்களிலும் அற்புதமான கருத்துக்கள் அழகாகக் கொடுக்கிறீர்கள். நிறைய எதிர்பார்க்கிறோம் சேனை உறவுகள்.

நன்றி பாயிஸ்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 17:00

நண்பன் wrote:
இலட்சி யத்தை மனதில் கொண்டு
இயங்கு கின்ற சேனை யின்று
இலட்சம் இரண்டு பதிவு நன்றாய்
நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

மிகவும் அருமையா உள்ளது இந்த வரிகள்
வாழ்த்துக்கும் வாழ்த்துக்கள் மேடம்
மிகவும் தேனாய் இனிக்கிறது
சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844

பாராட்டுவதென்றால் அது நண்பன் தான். இந்தச் சேனையில் இவர் பாராட்டாத பதிவுகள் அநேகமாக இருக்காதென்றே நினைக்கின்றேன். அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் சேனையை தூக்கி நிறுத்துவதில் நண்பனும் ஹம்னாவும் ஒன்று.

நண்பன் வாழ்த்தில் அகமகிழ்கின்றேன்.

(இங்கு ஒன்று சொல்ல வேண்டும் என்னுடைய கோபத்தையெல்லாம் எங்கு தொலைத்தேன் என்று தேடுகிறேன் .. இந்த சேனையில் சேர்ந்த பிறகு...ஹப்பப்பா... என்ன மகிமையோ சேனையில் எனக்குப் புரியவே இல்லை. நானா இது நாந்தான என பலமுறை என்னை நினைக்க வைக்கிறது.... ஏன் மாற்றத்தைக் கண்டு.... இந்த மாற்றம் வந்ததற்குக் காரணம், முதலில் ஹாசிம், பிறகு சம்ஸ், அதன் பிறகு நண்பன் அதற்குப் பின் ஹம்னா.

நான் இங்கு கற்றுக்கொண்டது /... அல்ல அல்ல.. பழகிக் கொண்டது... கோபத்தைக் குறைத்துக் கொள்வது....

உங்கள் அனைவருக்கும் நன்றிகள்... பலப்பல
. இது சத்தியமான வார்த்தை ...)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 17:05

sikkandar_badusha wrote:அன்புக் குப்பஞ் சமில்லை நட்பிற்
குப்பஞ் சமில்லை ஆறுத லோடு
கொஞ்சு கின்ற அரவணைப் பும்கொண்
டுநம்உள் ளமெல்லாம் மகிழ்ந் திடவே
இன்று போலென் றுமேயி ணைந்து
நாமொன் றாக உயர்த்திடு வோம்
நன்றாக சேனை யினைநளி மிக்க
தமிழுடன் நானிலத் தார்போற் றிடவே


அருமை லதா,, அழகு அறிவு,,

நன்றி பாதுஷா! இப்போல்லாம் ரொம்ப அதிகமாகவே பாராட்டறீங்க. பூர்விஷ் கிட்டே சொல்றேன் இருங்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Sep 2011 - 17:06

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
இலட்சி யத்தை மனதில் கொண்டு
இயங்கு கின்ற சேனை யின்று
இலட்சம் இரண்டு பதிவு நன்றாய்
நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

மிகவும் அருமையா உள்ளது இந்த வரிகள்
வாழ்த்துக்கும் வாழ்த்துக்கள் மேடம்
மிகவும் தேனாய் இனிக்கிறது
சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844

பாராட்டுவதென்றால் அது நண்பன் தான். இந்தச் சேனையில் இவர் பாராட்டாத பதிவுகள் அநேகமாக இருக்காதென்றே நினைக்கின்றேன். அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் சேனையை தூக்கி நிறுத்துவதில் நண்பனும் ஹம்னாவும் ஒன்று.

நண்பன் வாழ்த்தில் அகமகிழ்கின்றேன்.

(இங்கு ஒன்று சொல்ல வேண்டும் என்னுடைய கோபத்தையெல்லாம் எங்கு தொலைத்தேன் என்று தேடுகிறேன் .. இந்த சேனையில் சேர்ந்த பிறகு...ஹப்பப்பா... என்ன மகிமையோ சேனையில் எனக்குப் புரியவே இல்லை. நானா இது நாந்தான என பலமுறை என்னை நினைக்க வைக்கிறது.... ஏன் மாற்றத்தைக் கண்டு.... இந்த மாற்றம் வந்ததற்குக் காரணம், முதலில் ஹாசிம், பிறகு சம்ஸ், அதன் பிறகு நண்பன் அதற்குப் பின் ஹம்னா.

நான் இங்கு கற்றுக்கொண்டது /... அல்ல அல்ல.. பழகிக் கொண்டது... கோபத்தைக் குறைத்துக் கொள்வது....

உங்கள் அனைவருக்கும் நன்றிகள்... பலப்பல
. இது சத்தியமான வார்த்தை ...)
சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 17:11

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
இலட்சி யத்தை மனதில் கொண்டு
இயங்கு கின்ற சேனை யின்று
இலட்சம் இரண்டு பதிவு நன்றாய்
நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

மிகவும் அருமையா உள்ளது இந்த வரிகள்
வாழ்த்துக்கும் வாழ்த்துக்கள் மேடம்
மிகவும் தேனாய் இனிக்கிறது
சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  331844

பாராட்டுவதென்றால் அது நண்பன் தான். இந்தச் சேனையில் இவர் பாராட்டாத பதிவுகள் அநேகமாக இருக்காதென்றே நினைக்கின்றேன். அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் சேனையை தூக்கி நிறுத்துவதில் நண்பனும் ஹம்னாவும் ஒன்று.

நண்பன் வாழ்த்தில் அகமகிழ்கின்றேன்.

(இங்கு ஒன்று சொல்ல வேண்டும் என்னுடைய கோபத்தையெல்லாம் எங்கு தொலைத்தேன் என்று தேடுகிறேன் .. இந்த சேனையில் சேர்ந்த பிறகு...ஹப்பப்பா... என்ன மகிமையோ சேனையில் எனக்குப் புரியவே இல்லை. நானா இது நாந்தான என பலமுறை என்னை நினைக்க வைக்கிறது.... ஏன் மாற்றத்தைக் கண்டு.... இந்த மாற்றம் வந்ததற்குக் காரணம், முதலில் ஹாசிம், பிறகு சம்ஸ், அதன் பிறகு நண்பன் அதற்குப் பின் ஹம்னா.

நான் இங்கு கற்றுக்கொண்டது /... அல்ல அல்ல.. பழகிக் கொண்டது... கோபத்தைக் குறைத்துக் கொள்வது....

உங்கள் அனைவருக்கும் நன்றிகள்... பலப்பல
. இது சத்தியமான வார்த்தை ...)

உங்களிடமிருந்து கற்றவை அதிகமக்கா உடன்பிறப்புகளுக்கு மேல் உங்களைக் காண்பதால்தான் அன்போடு அணுக முடிந்தது உங்களது மாற்றம் எப்படி வியப்போ அவ்வாறே உங்களிடமிருந்து நாங்கள் கற்றதும் வியத்தகு விடயங்களே நன்றிகள் அக்கா


சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum