Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
4 posters
Page 1 of 1
நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
கவர்ச்சி நடிகை சோனா, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் மீது பாலியல் புகார் கூறினார். தனது நண்பர் வைபவ் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது, அங்கு எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடமும், தி.நகர் போலீசிலும் சோனா புகார் அளித்தார்.
நடந்த சம்பவத்துக்கு சரண் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையெனில் அவரை சும்மா விட மாட்டேன் என்று சோனா கூறினார். எஸ்.பி.பி. சரண் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியை சோனா ஏற்க வில்லை. எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
இதனால், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் இவர்களது விவகாரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் சோனாவும், சரணும் பிடிவாதமாக உள்ளனர்.
இதற்கிடையே, விருந்தில் எஸ்.பி.பி. சரண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா அறிவித்துள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தையும் போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, இந்த விவகாரம் மேலும் சூடி பிடிக்க தொடங்கி உள்ளது. போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், எஸ்.பி.பி. சரண் கோர்ட்டை அணுகி இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
தன்னிடம் தவறாக நடந்து கொண்ட எஸ்.பி.பி. சரண் 10 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சோனா கெடு விதித்து இருந்தார். அந்த கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் (23-ந்தேதி) முடிவடைந்தது. ஆனால், எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்காததால், சோனா பெண்கள் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளார்.
பெண்கள் அமைப்பும் சோனாவுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளன. எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்த பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி, ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி கல்பனா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக, எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது.பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சோனா தனது புகாருக்கான ஆதாரங்களை போலீசில் அளித்துள்ளார். அவருக்கு எதிராக பாலியல் கொடுமை நடந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே தான் நாங்கள் சோனாவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு 500 பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு கல்பனா கூறியுள்ளார்.
முன்னதாக நடிகை சோனா நிருபரிடம் கூறியதாவது:
எனது புகாருக்கான ஆதாரங்களுடன் சென்று கமிஷனர் திரிபாதியை சந்தித்தேன். நான் புகார் அளித்துள்ள போலீஸ் நிலையத்தில் போய் ஆதாரங்களை ஒப்படைக்குமாறு அவர் என்னிடம் கூறினார். அதன்படி, வீடியோ, ஆடியோ மற்றும் எஸ்.எம்.எஸ். ஆதாரங்களை தி.நகர் போலீசில் அளித்தேன்.
சரண் மன்னிப்பு கேட்க இன்னும் வாய்ப்பு அளித்துள்ளேன். திங்கட்கிழமை வரை காத்திருப்பேன். அதன் பிறகும், மன்னிப்பு கேட்பதை சரண் தவிர்த்தால், கூடுதல் ஆதாரங்களை போலீசில் சமர்ப்பிப்பேன். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் போன்ற நண்பர்களையும் சாட்சிகளாக இதில் சேர்ப்பேன்.
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
சோனா மேட்டர் டாப்பல போகுது 100 நாள் ஹவுஸ் புள்தான் :,;:
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
சினிமாவுக்கு இனி இவர் சொல்வார்
அப்படியே நானும் சொல்லுகிறேன் .
அப்படியே நானும் சொல்லுகிறேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
மகளிர் அணி களம் இறங்கி விட்டதா... இனி சங்கு தான் ...கூப்பிட்றவன் இப்படி பப்ளிக்கா நாலு பேரு மத்தியில அசிங்கமா கூப்பிட்டதனால இன்னிக்கு மங்காத்தா உள்ளே வெளியே ஆட்டம் எஸ்பிபி வீட்டுக்குல்லீயே நடக்குது ங்கொய்யால
தானைத்தலைவி சோனாவா கொக்கா ..
தானைத்தலைவி சோனாவா கொக்கா ..
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
அண்ணா நீங்கதான் தலைவரா சோனா மன்றத்துக்கு :,;:
Re: நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
வரும்போதே ஏழறை யாநேசமுடன் ஹாசிம் wrote:அண்ணா நீங்கதான் தலைவரா சோனா மன்றத்துக்கு :,;:
தலைவி ன்னா உனுக்கும் தான் ..
நாம எல்லோரும் நம் தலைவியின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியாக்க வேண்டும்...
அந்தப் பதவிய நீயே திறமையா நடத்து எனக்கு எதுக்கு ...
நமக்கு இருக்கவே இருக்கு அது என்னது தபசியா பெப்சியா... அது போதும்...
Similar topics
» நடிகை சோனாவுக்கு மாரடைப்பு- மருத்துவமனையில் அனுமதி
» விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» மயிலம் அருகே வீட்டு முன்பு தூங்கிய 3 பேர் லாரி மோதி பலி
» விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» மயிலம் அருகே வீட்டு முன்பு தூங்கிய 3 பேர் லாரி மோதி பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|